"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!"

Friday, August 8, 2008

"தற்கொலை செய்து கொள்வது எப்படி?"- பாகம் 2






பாகம் 2
"தற்கொலை செய்து கொள்வது எப்படி?"




தற்கொலையை பிரெஞ்ச் சமூக விஞ்ஞானி மூன்று வகையாகப் பிரிக்கிறார்.

அகங்காரத்துடன் கூடியது(egoistic):
சமூகத்துடன் அவ்வளவாக ஒத்துப் போகாத,சமூகத்தின் வெளியே இருந்து கொண்டு,சமூகத்தின் துணையை நாடாமல் இருக்கிற கூட்டம்.இவர்களில் மணமாகாத ஆண்களே மற்றவர்களை விட அதிகமாக தற்கொலை செய்து கொள்கின்றனர் .

பிறர்நலம் விரும்புவர்(altruistic):
சமுதாயத்திற்காக எல்லாவற்றையும் தானம் செய்து நிர்கதியாக நிற்பவர்கள்.உதாரணம் சுதந்திர போராட்ட வீரர்கள்.

விருப்பம் ஈடேறாதவர்கள்(anomic):
இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு சிறிய சாதாரண ,நியாயமான ஆசைகள் கூட நிறைவேறு வதில்லை.அதனாலேயே தற்கொலை வழியை தேர்ந்தெடுக்கிறார்கள்.

சிறுவயதினர் (20 வயதிற்குள்) தற்கொலைக்கு முயல்பவர்கள்,அபாயம் குறைந்த பொருள்களையே பயன்படுத்துகிறார்கள். வெறும் கவனத்தை ஈர்க்கும் முயற்சி தான்.முழுமனதோடு சாக விரும்புவதில்லை.

20 வயதுக்கு மேல் 30 வயதுக்குள் தான் நிறைய தற்கொலைகள் நிகழ்கின்றன.இந்த வயதினர் தற்கொலைக்கு அபாயகரமான பொருட்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.சாக வேண்டும் என ஆழமான நோக்கத்துடன் உறுதியாக செயல்படுகிறார்கள்.

அமெரிக்காவில் தந்தையில்லாத அல்லது தாய் இல்லாத குடும்பத்தின் குழந்தைகள் மிக அதிகமாக தற்கொலை செய்துகொள்கிறார்கள்.

கம்யூனிச ஆட்சியின் கீழ் இருந்த ரஷ்யா பலநாடுகளாக சிதறியபோது,முதலாளித்துவ நாடுகளின் வற்புறுத்தலுக்கு இணங்க, தாராளமயமாக்கல் போன்ற பொருளாதார மாற்றத்தால் அதிகமானவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள்.

நகரங்களில் தான் தற்கொலைகள் மிகுதியாக நடக்கின்றன.

சிற்றூரிலிருந்து வேலைதேடி,நகரக் கவர்ச்சியை நம்பித் தமிழ் கிராம மக்கள் இடம் பெயர்கின்றனர்.வேலை எதிர்பார்த்த அளவு கிடைப்பதில்லை.மன உளைச்சல்,வீட்டைப் பிரிந்த தனிமை,மனச்சிதைவு,ஏனைய நகரவாசிகளுடன் ஒத்துப்போக இயலாமை போன்றவைகள் அவர்களைத் தற்கொலையை நோக்கித் தள்ளுகின்றன.

கலகலப்பாகவும்,வெளிப்படையாகவும் பேசுபவர்களிடம் தற்கொலை உணர்வு அதிகாரம் செய்வதில்லை.

எதையும் அழுத்தமாக மனதுக்குள் போட்டு பூட்டி வைப்பவர்களைத்தான் தற்கொலை எண்ணங்கள் கொல்லுகின்றன.

கட்டுக் கோப்பான குடும்பச் சூழல்களில் தற்கொலைகள் குறைவாக நிகழுகின்றன.சிதறிய குடும்பங்களில் தான் தற்கொலைகள் மிகுதி.


கூட்டுக் குடும்பம்,தற்கொலை எண்ணிக்கையை குறைக்கும்.

தற்கொலை,குற்றங்கள் பெருக்கம் அச்சமுதாயத்தின் கட்டமைப்பு சரியாக இயங்க வில்லை என்பதைத் தான் குறிக்கின்றன.

மொழி,இன,நாடு,சமுதாயம் எனக்கூட்டுணர்வு தமிழர்களிடம் குறைவு.

மொழி,இனம் தழுவிய ஏனையவற்றைப் போலத் தன்னலமே இல்லாத அல்லது குறைந்த பொதுநலத் தலைவர்கள் தமிழ்நாட்டில் தோன்றவில்லை அல்லது தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கைக்குப் போதியவர்களாக இல்லை.இந்த வகையில் உருவாகிய தலைவர்களுள் குறிப்பிடத்தக்க ஒரே ஒருவர் பெரியார் ஈ.வே.ரா ஆவார்.காலப் போக்கில் தமிழகத்தில் இருந்த சாதி,மதம் அவற்றைச் சார்ந்த அரசியல் சிக்கல்களால் பெரியாரின்
இயக்க எல்லைகள் கூட எல்லோரையும் சென்றடையும் பான்மை பெற இயலாது போயிற்று.

இந்தியாவில் அமைந்த அரசியல் அமைப்பு பணக்காரர்கள் செல்வாக்கை அடியொற்றியே அமைக்கப் பட்டதாகும்.எனவே,இங்கே சம உடைமை அமைப்போ அல்லது பொதுவுடைமை அமைப்போ தோன்ற முடியவில்லை.தனிவுடைமை வாதமும் முதலாளித்துவ வாதமும் கொண்ட அமைப்பே இங்கே உருக்கொண்டது.இவற்றிற்குப் பணமே முதன்மை அடித்தளம்.

இந்தியாவில் பிற மாநிலங்களை விட ,தமிழர்களிடமே அதிக தற்கொலை உணர்ச்சி அதிகம் காணப் படுகிறது.தன் நாடு,தன் மொழி,தம் நாட்டவரை விட பிற நாட்டவனை ,பிற நாட்டுமொழி,பிற நாட்டைப் பற்றி உயர்வாக போற்றுகிற தாழ்வு மனப்பான்மை தமிழர்களிடையே மிகுந்து காணப்படுகிறது.

ஜான் வெல்ஸ் என்ற புகழ்பெற்ற அறப் போராட்ட வீரர்(1703-1791)தற்கொலை முயற்சியில் தோல்வியுற்று வாழ்வோரை திரும்பவும் தூக்கிலிட வேண்டும் என்று கூறுகிறார்.

கணவனின் உடல் வீட்டிலிருந்து சுடுகாட்டுற்கு எடுத்து வரும்போது மனைவியும் உடன் வருவாள்.மனைவி மகிழ்ச்சி நிறைந்தவளாகக் காணப்படுவாள்.வரும் போது வலது கையில் கண்ணாடியும்,இடது கையில் எலுமிச்சைப் பழமும் கொண்டு வருதல் வேண்டும்.சுடுகாட்டில் பத்து முதல் பன்னிரண்டு அடி ஆழ,நீள அகலமுள்ள குழியொன்று வெட்டப் பட்டிருக்கும்.அக்குழியில் கட்டைகள் அடுக்கப் பெற்று கணவனது
உடல் வைக்கப் பெறும்.பின்னர்ச் சிதை தீ மூட்டப் பெற்றுக் கொழுந்து விட்டு எரியத் தொடங்கும்.

இந்திலையில் மனைவி தூய்மையாக நீராடி ஈர உடையுடன் வருவாள்.அங்குக் கூடியிருப்பவர்களுக்குள் தனக்கு மிக விருப்பமானவர்களுக்குத் தனது நகைகள்,பொருள்கள் போன்றவற்றைத் தருவாள்.

அப்பொருள்கள் நினைவு வழிபாட்டிற்கெனக் காக்கப் பெறும்.பின்னர் அச்சிதைக்குழியை ஒருமுறை வலம் வருவாள்.அதன் பின்னர்க் குழியில் பாய்ந்து உயிர் விடுவாள்.அவளை வலிந்து தள்ளியதற்கான குறிப்புகள் இல்லை.மனைவி தீயில் பாய்ந்த நிலையில் கூடியுள்ளவர்கள் விறகுக் கட்டைகளை மேலும் மேலும் போட்டு அவளை உயிரோடு மறைத்து விடுவார்கள்.கட்டையின் மேல் பீப்பாய் பீப்பாயாக நெய்
ஊற்றப்பெறும். தீக் கொழுந்து விட்டு எரியும்...

என்கிறார், 17 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ராபர் டி நொபிலி என்னும் அறிஞர்.

ஆப்பிரிக்காவில் தற்கொலை எண்ணிக்கை மிக மிகக் குறைவாக உள்ளது.ஆப்பிரிக்கர்கள் எதனையும் இலேசாக எடுத்துக் கொள்ளுகின்ற மனப் போக்கினர், சமுதாயச் சிக்கல்கள் மிகுதியாக இல்லாதவர்கள்,இயற்கையோடு ஒன்றி வாழ்கின்றவர்கள்.

தற்கொலை தடுப்பு தினம் முதன் முதலாக 2003 ஆம் ஆண்டு செப்டம்பர் 10 ஆம் தேதி கொண்டாடப்பட்டது.

மென்மையானவர்கள் என்று சொல்லப் படுகிற பெண்களே அதிகமாக தீக் குளிப்பு வழி தற்கொலையைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

தற்கொலை செய்து கொள்ளும் பெண்கள்,தான் எழுதிய கடிதத்தில்,தன்னுடைய இந்த தற்கொலை செயலுக்கு எல்லோரும் என்னை மன்னிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறாள்.

ஆனால் தற்கொலை செய்து கொள்ளும் ஆண்களோ,அவர்களின் இந்த செயலுக்கு பிறரைத் தான் குற்றம் சாட்டுகிறார்கள்.

பெண்களின் தற்கொலை சாவுகளை விட இரண்டு மடங்காக ஆண்களின் தற்கொலைச் சாவுகள் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.

படித்தவர்கள் தான் அதிகமாக தற்கொலை செய்து கொள்கிறார்கள்.படிக்காதவர்களிடம் கொலைகள் தான் அதிகமாக காணப்படுகின்றன.

படித்தவன் வன்முறையை தன் மீதே செலுத்திக் கொள்கிறான்.ஆனால் படிக்காதவனோ வன்முறையை அடுத்தவர்கள் மீது செலுத்துகிறான்.

நம் ஊரில் அரசே நடத்தும் தற்கொலை தயாரிப்பு நிலையமாக இயங்கி வரும் ஒயின்சாப் மாதிரி ,சப்பானில் நிறைய தற்கொலை அமைப்புகள் இயங்குகின்றன.தற்கொலை செய்து கொள்ள உதவும் இணையதளங்கள் கூட சப்பானிலிருந்து இயங்குகிறது.சப்பானிய அரசும் அதைப் பற்றிக் கவலைப் படுவதும் இல்லை.கண்டு கொள்வதும் இல்லை.

வளர்ந்த நாடுகளில் மனநல மருத்துவர்களை நாடுவது சாதாரணம்.ஆனால் இங்கோ அப்பழக்கம் அவ்வளவாக இல்லை.

தற்கொலை செய்து கொள்பவர்கள் பெரும்பாலும் மென்மையானவர்களாகவே இருக்கிறார்கள்.நியாய உணர்ச்சிக்கு கட்டுப் பட்டவர்களாகவே இருக்கிறார்கள்.அன்புக்கு அடிமையானவர்களாக

இருக்கிறார்கள்.தன்னைத் தானே தண்டித்துக் கொள்கிறார்கள்.எதை செய்தாவது, எப்படியாவது வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற எண்ணம் இருப்பவர்களோடு போட்டி போட முடியாமல்...

பொய்யான வாழ்க்கையை எதிர்த்து போராட முடியாதவர்களாக,சமரசம் செய்து கொள்ள முடியாத,சமாளிக்க முடியாத கோழைகளாக இறக்கிறார்கள்.

ஒவ்வொரு ஆணும், பெண்ணும் ஒரு தடவையாவது தற்கொலைக்கு முயன்று இருப்பார்கள்.எப்படிப்பட்ட நபரின் வாழ்க்கையிலும் ஒரு தடவையாவது காதல் வந்து போயிருக்கும் என்கிறது வாழ்க்கை அனுபவ மொழி ஒன்று.




கண்ணுக்கு தெரிகிற,சற்றென்று தெரிகிற காரணமாக, மோசமான அரசியல் தான் முதன்மையான காரணமாகத் தெரிகிறது.

தேர்தலில் ஓட்டுப் போட பணம் வாங்கிக் கொண்டு கண்ணை மூடிக் கொண்டு யாருக்காவது ஓட்டுப் போடுவது...

எந்த ஓட்டையும் பதிவு செய்யாத பணக்கார படித்த மேதைகள்...

ஆண்களுக்கு சமம் என்கிற பெண்கள்,ஆண்களைப் போல இல்லாமல் ,நகையின் மேல் பைத்தியமாக இருக்கும் பெண்கள்...

வரதட்ணைக்கு எதிராக போராடாமல்,விவாகரத்து கேட்டு வழக்கறிஞரின் வீட்டுக்கு முன்னால் வரிசையாக நிற்கிற படித்த பெண்கள்...

அழகுக்கும்,பணத்துக்கும் முன்னுரிமை கொடுக்கிற அறிவான காதல்...

வேலைக்குப் போகிற பெண்ணாகப் பார்த்து திருமணம் செய்து கொள்கிற புத்திசாலி ஆண்கள்...

அழகுப் பொருள்களைத் தேர்ந்தெடுக்க காட்டுகிற அக்கறையை,அறிவு வளர அக்கறை காட்டாத பெண்கள்...

நல்ல பழக்க வழக்கங்களை,இலக்கியங்களை கற்றுத் தராமல் வெறும், சுயநல புலிகளாய் வளர்த்து, பண வேட்டைக்கு பிள்ளைகளை தயார் செய்யும் பெற்றோர்கள்...

மனிதர்களை விட மதத்திற்கும் ,சாதிக்கும் இரத்த தானம் செய்யும் மனிதர்கள்...

தற்கொலைச் சாவுகளைப் போலவே ,அதற்கான காரணங்களும்
நீண்ண்ண்ண்ண்டு
கொண்டே தான் இருக்கின்றன...



நாம் என்ன செய்யப் போகிறோம்...?

_ஆதிசிவம்,சென்னை.





Share/Save/Bookmark

தற்கொலை செய்து கொள்வது எப்படி?-பாகம் 1







பாகம் 1
"தற்கொலை செய்து கொள்வது எப்படி?"


எகிப்து நாட்டின் அழகு தேவதை கிளியோபாத்ரா,தன் காதலன் ஆண்டனியின் இறப்பைப் பொறுத்துக் கொள்ள முடியாமலும்,எதிரியின் கையால் சாக விரும்பாமலும் நச்சுப் பாம்பை தன் மார்பில் கடிக்க வைத்து மாண்டுபோனாள்.

மேலனேசியாவில் தென்னை மரத்தின் மேல் ஏறிக்குதித்து உயிர் விடும் பழக்கம் இருந்து வந்தது.

வடகலிபோர்னியாவின் ஒரு பகுதியில் வாழும் விண்டு(wintu) என்ற இன மக்கள் ஆழமான நீர் நிலைக்குச் சென்று குதிப்பர்.உயிர்போகும் வரை கரைக்கு வருவதும் மீண்டும் தண்ணீரில் குதித்து இறப்பதும் அம் மக்களின் பழக்கம்.

ஹவாய்த் தீவில் தலைவனோ,தளபதியோ இறந்த பின் அவனுடைய ஊழியர்களும் உடன் தற்கொலை செய்து கொள்வது வழக்கம்.

சப்பானில் அடிவயிற்றில் தன் வாளால் குத்தி, தானே குடலை எடுத்து மரணம் எய்தும் "ஹரகிரி" என்ற வழக்கம் இருந்து வந்தது.

சமயவெறி பிடித்த சப்பானியர்கள் கடல் பயணம் மேற்கொள்ளும்போது கப்பலின் மேல் மட்டத்திலிருந்து,பலரும் பார்க்கும் வண்ணம் கடலில் குதித்து உயிர் விடுவர்.அவர்களை யாரும் தடுத்து நிறுத்த மாட்டார்கள்.மாறாக அவர்கள் கடலில் குதிக்கும் முன் காண்போர் வணங்கி ஆசிகளைக் கேட்டுப் பெற்றுக்கொள்வார்கள்.

காதலில் தோல்வியுற்ற காதலர்கள் ஒருவரையொருவர் கயிற்றினால் பிணைத்துக்கொண்டு மிகுந்த ஆழம் உள்ள நீர் நிலைகளில் குதித்து உயிர் விடும் "சிஞ்சு"(shinju) என்ற தற்கொலைப் பழக்கம் சப்பானியர்களிடம் இருந்து வந்தது.

தென் அமெரிக்க மயன் மக்கள் தற்கொலைக்கு என்றே "எல்ஸ்டாவ்"(lxtav) என்னும் பெண் தெய்வத்தைக் கொண்டிருந்தனர்.அப்பெண் தெய்வத்தின் தோற்றம் ஆகாயத்தில் இருந்து தூக்கு மாட்டிக் கொண்டு தொங்குவது போல இருக்கும்.

ஸ்பெயின் நாட்டுப் பழங்குடியினர் இறப்பை வரவேற்கிறார்கள்.கிழப்பருவம் வரை அவர்கள் காத்திருப்பதில்லை.தற்கொலை செய்து கொள்வதை கொண்டாடுவார்கள்.

கணவனைக் கொன்ற வேலைத் தன் மார்பில் பாய்ச்சி இறக்கும் மனைவியின் தற்கொலையை ஆஞ்சிக்காஞ்சி என்கிறார், தொல்காப்பியர்.

ஆண் குரங்கை இழந்த,தாய்க் குரங்கு தன் குட்டிக் குரங்கை உறவினக் குரங்குகளிடம் ஒப்படைத்துவிட்டு மலை உச்சியில் ஏறிக் கீழே பாய்ந்து இறந்து விடுவதை குறுந்தொகைப் பாடல் ஒன்று பதிவு செய்திருக்கிறது.

அன்றில் பறவைகளில், துணைப் பறவை இறந்து விட்டால்,இணைப் பறவையும் உடன் இறந்து விடும்.ஆண் இறந்தால் பெண் இறந்து விடும்;பெண் இறந்தால் ஆண் இறந்து விடும்.மூன்று முறை உரத்துக் கூவி அழைக்கும்,இணைப் பறவை மாற்றுக் குரல் கொடுக்க இயலாது மடிந்து கிடக்குமானால்; மற்றதும் உயிரை விட்டு விடும்.உரத்த குரலில் கதறிக் கதறி அழுதே உயிரை விட்டுவிடும் என்று நற்றிணையும்,அகநானூறும்,கலித்தொகையும்,குறுந்தொகையும் கூறுகிறது.

ஒருவன் தன்னைத் அரிந்து ஒன்பது கூறுகளாக்கி,அவற்றில் ஒன்றினைத் தெய்வத்திற்குப் படைக்கும் நவகண்டம் கொடுத்தல் பற்றி கல்வெட்டுகளிலும் இலக்கியங்களிலும் குறிக்கப் பட்டிருக்கின்றன.

இடைக்காலத் தமிழகத்தில் கோயில் கோபுரத்திலிருந்து தற்கொலை செய்யும் பழக்கம் மிகுதியாக இருந்து வந்திருக்கிறது.

திருவரங்க கோயிற் பூசைகள் முறையாக நிகழவில்லை என்பதைக் கண்டித்து,அழகிய மணவாளதாசன் எனும் அறங்காவலர்,கோயில் கோபுரத்தில் ஏறிக்குதித்து உயிர் துறந்தார்.இந் நிகழ்வின் பின்,கோயில் வழிபாட்டு முறை சரி செய்யப் பட்டது.அக்கோபுரத்தில்,அவருக்குச் சிலையும் அமைக்கப் பட்டது.

மதுரை விசயரங்க சொக்கநாதன் ஆண்டான் அறுபத்து நான்கு பேர்,சொக்கநாதர் கோயிற் பணியாளர்.அவர்கட்கு மான்யமாக வழங்கப் பட்டு பல ஊர்களில் இருந்த நிலங்கட்கு தாளமுடியாத வரி அரசால் போடப் பட்டது.அதை எதிர்த்த ஒருவன் கோபுர உச்சியில் ஏறிக் குதித்து உயிர் நீத்தான்.உடன் வரி நீக்கப்பட்டது.

பதினெட்டாம் நூற்றாண்டில் (கி.பி.1792) அய்ரோப்பியப் படையினர்,மதுரையில் உள்ள சொக்கநாதர் கோயிலை அழித்தனர்.திருப்பரங்குன்றம் பழநி ஆண்டவர் கோயிலையும் அழிக்க முனைந்தனர்.அதை எதிர்த்து "குட்டி" என்பவர் கோபுர உச்சியில் ஏறிக் குதித்து உயிர் விட்டார்.இந்நிகழ்வைக் கண்டு அதிர்ந்த அய்ரோப்பியப் படை அவ்வூரை விட்டு அகன்றது.

இச்செய்தியை மதுரை திருப்பரங்குன்றக் கொயில் கல்வெட்டு உணர்ச்சி ததும்ப தெரிவிக்கிறது.

கி.பி. 1628 இல் மதுரை நாயக்கர் மன்னன் மடிந்தபோது,அவனது 700 மனைவியரும் உடன் தீக்குளித்தனர்.கி.பி. 1659 இல் புகழ்பெற்ற திருமலை நாயக்கர்,இறந்தபோது அவருடன் அவனுடைய 200 மனைவியரும் தீக்குளித்து இறந்தனர்.


தமிழ் கவிஞர்களிடையே ஒர் அவநம்பிக்கை உணர்வு இழையோடுவதை அறிஞர்கள் கண்டிருக்கலாம்.குறிப்பாச் சொன்னால் பக்தி இலக்கியங்களில் வாழத் துடித்தலை விட சாகத் துடித்தல் மூலம் இறைவனின் திருவடிகளை எய்தலாம் என்பது போன்ற நிறைய அவலங்கள் கொட்டிக் கிடக்கும்.

இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டபோது,இந்திராவின் இறப்பைத் தாளாமல் 4 தமிழர்கள் தீக்குளித்தனர்.3 பேர் தூக்கிட்டுக் கொண்டனர்.ஒருவர் நஞ்சுண்டார்.7 பேர் நெஞ்சு அதிர்ந்து இறந்தனர்.இவர் அனைவரும் தமிழர்கள்.ஒரிசாவிலுள்ள கட்டாக்கில் ஒருவர் தீக் குளித்தார்.அவரும் தமிழரே.மலேசியாவில் தேநீர் கடைக்காரர் தூக்கிட்டுக் கொண்டார்.அவரும் தமிழரே.

எம்.ஜி.ஆர் காலமான செய்தியைக் கேட்டு 26 பேர் தமிழ்நாட்டில் தற்கொலை செய்து கொண்டார்கள்.

இராசீவ் காந்தி கொல்லப் பட்டதை அறிந்து தமிழ்நாட்டில் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 6 .

தமிழ்நாட்டில் தற்கொலைக்கு என்றே பெயர் பெற்ற தனி ஊர் ஒன்று உள்ளது.வேலூருக்கு அருகே "முள்அண்டிரம்" என்ற ஊர்.மாதம் சராசரி 15 முதல் 20 பேர் இவ்வூரில் தற்கொலை செய்து கொள்கின்றனராம்.

வெப்ப மண்டலத்தில் வாழும் மக்களிடையே தற்கொலை மிகுதி,குளிர் மண்டல வாழ் மக்களிடையே தற்கொலை குறைவாகவும் நிகழ்கிறது என்கிறது,ஓர் ஆய்வு!

கின்னஸ் புத்தகத்தில் உலகிலேயே மிகுதியாகத் தற்கொலை நிகழும் நாடு இலங்கை எனப் பதிவாகியுள்ளது.நாள்தோறும் 27 பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்கிறது, சிங்கப்பூர் தமிழ்முரசு.

காருக்குள் ,கார்ப்புகையை நிரப்பி தற்கொலை செய்து கொள்ளும் பழக்கம் ஆஸ்திரேலியர்களிடம் இருந்த வந்தது.அதனால் கார்புகையைக் கட்டுப்படுத்தி,புகை காரினுள் வரமுடியாதபடி கருவிகளைத் தயாரிக்கக் கார் உற்பத்தியாளர்கள் முயன்று வருகிறார்கள்.

இறந்த கணவனை எரிக்கும் தீக்குள் பாய்ந்து இறந்த யாரோ ஒரு பெண்ணிற்காக தோன்றிய தீப்பாய்ந்தாள் கோயில்களே ,இன்று திரெளபதியம்மன் கோயில்களாக மாறின என்று ஓர் ஆய்வேடு கூறுகிறது.

தாங்கள் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருந்த இடம் முழுவதும் மாசடைந்த சமயத்தில்,இனிமேலும் அங்கு வசிப்பது இயலாது என்ற நிலையில்,தங்களுக்குத் தேவையான உணவு கிடைப்பது அரிது என்று அறிந்த பறவைகள் கூட்டம் கூட்டமாக தண்ணீரில் மூழ்கி ஜலசமாதி செய்து கொண்ட சம்பவங்கள் ஏராளம்.



_ஆதிசிவம்,சென்னை.





Share/Save/Bookmark

மின்னஞ்சல் வழியே உடனடியாகச் சூடாகப் புதியப் பதிவுகளைப் பெற...

Enter your email address:

Delivered by FeedBurner

Labels

Blog Archive

Search This Blog

Followers

About Me

My photo
e m@il: (loveable@poetic.com) (foryouths@beyouths.com) (mobile 9941463500)

உங்கள் கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்

Guestbook

என் வலைப் பூக்கள்...!

"நான் எப்போதும் மழையில் நடக்க விரும்புகிறேன். அப்போதுதான் நான் அழுவதை யாரும் பார்க்க முடியாது" -சார்லி சாப்ளின்


 என் வலைத்தளத்தில்
 www.nee-naan-nilaa.blogspot.com
  
நான் எழுதிய சார்லி சாப்ளின் கதையை
இந்த முகவரியில் இணைத்திருக்கிறது..!

கீற்று இணைய தளத்திற்கு...

நன்றி!
Clicky Web Analytics