"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!"

Saturday, March 14, 2009

பிணம் தின்னும் சாமியார்கள் வீடியோ + நான் கடவுள்

பிணம் தின்னும் சாமியார்கள் வீடியோ

+

"நான் கடவுள்" விமர்சனம்




எல்லோரும் திருட்டு CD வாங்கியாவது நான் கடவுள் படத்தைப் பார்த்து தங்களின் சனநாயகக் கடமையை நிறைவேற்றியிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

தலைவன் என்ற தகுதி கூட இல்லாதர்களை அரசியல் தலைவராக்கி,நடிக்கவே தெரியாதவர்கள் முன்ணனி நடிகனாக்கி கோவில் கட்டிக் கொண்டாடும், நாடு...

நம் தமிழ்நாடு என்பதால்...

தமிழர்கள் மீதான கோபம் உங்களைப் போலவே எனக்கும் கொஞ்சம் சற்று அதிகமாகவே உண்டு.




அப்படி என்ன தான் இருக்கிறதாம்,நான் கடவுள் படத்தில்...?

பணக்கட்டுத் தந்தால் புல்லுக்கட்டையையும் தின்னத் தயார் என்று கவிப்பேரரசுகள் வாழ்கிற தமிழ்த் திரைப்படத்துறையில், காசுக்காக கண்டதையும் எழுதிப் பிழைக்க மாட்டேன் என்று ஒதுங்கியிருக்கும் கொள்கைச் சிங்கம் கவிஞர் அறிவுமதி கண்டுபிடிப்பு, இயக்குநர் பாலா.

எதையும் நேரடியாகச் சொல்லாமல், உள் மறைந்து நின்று முகத்தில் அறைந்து கருத்துச் சொல்வது பாலாவின் பாணி.








கேமிராவில் கோவில் கோபுரத்தைக் காட்டி மணியாட்டி ஆரம்பிக்கிற படத்தின் துவக்கக் காட்சி இதில் இல்லை.

மூக்கைத் துளைக்கிற பிணம் எரிகிற நாற்றத்தோடு படம் துவங்குகிறது.

தமிழ் சினிமா இலக்கணத்தை உடைக்கிற,மூடநம்பிக்கையை உடைக்கிற,முதல் காட்சி, முதல் புரட்சி.

சோதிடத்தை நம்புகிற எல்லோரையும் முகத்தில் அறைவது,இரண்டாவது புரட்சி.

பெண் ஆணை அறைவது மூன்றாவது புரட்சி.

இப்படித்தான் படத்தின் ஆரம்பமே நமக்குள் நாற்காலி போட்டு உட்கார்ந்து கொள்கிறது,மரியாதையோடு...

சாமியார் வேஷம் போட்டு கடவுள் கருத்துக்களை கேலி பேசும் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றும் வசனங்கள் ...

படம் நெடுக...

பாலாவின் மூன்று வருட உழைப்பு வீண் போகவில்லை.





மகன் பிறந்தால் தந்தையின் உயிருக்கு ஆபத்து என்ற சோதிடனின் பேச்சைக் கேட்டு சிறுவயதிலேயே காசியில் விட்டு வந்த மகனை இளைஞனான பிறகு அவனை படாத பாடுபட்டு தேடி வீட்டுக் கூட்டி வருகிறார், தந்தை.

பிச்சைக்காரர்களை வைத்து தொழிலதிபராகும் நபர்களை போட்டுத் தள்ளி விட்டு மீண்டு...

குடும்பச் சூழலோடு ஒத்துப் போகாதா வாழ்க்கை அவனுடையது என்பதை தன் குடும்பத்துக்கு உணர்த்தி விட்டு...

அந்த சாமியார் இளைஞன் மீண்டும் பழைய வாழ்க்கைக்கே திரும்புவது...

அவ்வளவு தாங்க கதை.


இந்த படத்தை அம்பானிகள் பார்த்துத் தொலைத்தால்,பிச்சைக்காரர்களின் பிழைப்பில் கூட மண் விழும் அபாயம் இருக்கிறது. பிச்சையெடுப்பதையும் பிஸினெஸ் உத்திகளில் ஒன்றாக்கி...

கிளைகளைப் பரப்பி இருப்பார்கள்,பரப்பி...





"நானே போலீசுக்கு பயந்து இங்க வந்து மலையில ஒளிஞ்சுக்கிட்டு இருக்கேன்" என்று சாமியார் பேசுவது.

பிச்சைக்காரர்களை வைத்து பிச்சையெடுக்கும் முதலாளியின் கையாள் முருகன் கோவிலுக்கு சாமி கூம்பிட வரும்போது...

"கோவில் உண்டியல விட உனக்குத் தான் நல்ல வசூலாமே"... என்ற நக்கல்...

"இவன் செய்யிற பாவத்துக்கு ஊர்ல இருக்கிற எல்லா சாமிங்களையும் கும்பிட்டாக் கூட தீக்க முடியாது "என்று கையாளை கேலி பேசுவது ...

"கையும் காலும் இல்லாம கல்லாக உட்கார்ந்திருந்தால், அவன் என்னடா சாமி?" என்று மாங்காட்டு சாமியாரை அகோரி சாமியார், ஒரு பிடி பிடிப்பது...

கண்ணுக்கு முன்னால் தப்பு நடந்தால், தட்டிக் கேள்... அப்படிக் கேட்டால் நீயும் கடவுள் தான், என்று..

வழக்கம் போல...

உலக சினிமாவுக்கு போட்டி போடுகிற தகுதியோடு,விருதுக்குரிய, அதே சமயம் வசூலை வாரிக் குவிக்கிற, பாமர மக்களின் இரசனையை உயர்த்துகிற, கடினமான விஷயங்களையும் எல்லோரும் ஏற்றுக் கொள்ளும்படியான திணிக்கப்படாத, ஆரோக்கியமான வசனங்கள்,கலையம்சமான காட்சி அமைப்புகள், என...

தன்னுடைய மற்ற எல்லாப் படங்களையும் விட சற்று அதிகமாகவே உடுக்கை ஒலி அதிர சொல்லிப் போயிருக்கிறார்,பாலா.





படத்தில் வருகிற சண்டைக் காட்சிகளில் விழும் அடி நம் மேல் விழுகிற அடியாக பலமாக விழுகிறது. சண்டைக் காட்சிக்காக பல்லை உடைத்துக் கொண்டதாக அறிந்தேன். மிரட்டல்.



படத்தில் வரும் கதை மனிதர்கள் அழுக்காக இருக்கிறார்கள்...

உழைப்பின் நிறம் அழுக்கு...

ஆம்...!

அழுக்கு ஜெயிக்கும்...!

இந்த உண்மையை ஓங்கி வானத்தில் எகிறிக் குதித்து உரக்கச் சொல்லியிருக்கிறார்,பாலா.

அதில் வெற்றியும் பெற்று விட்டார்...

பாலா...!

_ஆதிசிவம், சென்னை

பிணம் தின்னும் சாமியார்கள் வீடியோ படம் பார்க்க....












இந்த பதிவின் முகவரியை மட்டும் அடைய/கருத்துச் சொல்ல...

http://beyouths.blogspot.com/2009/03/blog-post_14.html#links


எல்லா பதிவுகளையும் மின்னல் வேகத்தில், பார்வையிட்டு வெளியேற......
http://feedproxy.google.com/beyouths/bImA

Share/Save/Bookmark

மின்னஞ்சல் வழியே உடனடியாகச் சூடாகப் புதியப் பதிவுகளைப் பெற...

Enter your email address:

Delivered by FeedBurner

Labels

Blog Archive

Search This Blog

Followers

About Me

My photo
e m@il: (loveable@poetic.com) (foryouths@beyouths.com) (mobile 9941463500)

உங்கள் கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்

Guestbook

என் வலைப் பூக்கள்...!

"நான் எப்போதும் மழையில் நடக்க விரும்புகிறேன். அப்போதுதான் நான் அழுவதை யாரும் பார்க்க முடியாது" -சார்லி சாப்ளின்


 என் வலைத்தளத்தில்
 www.nee-naan-nilaa.blogspot.com
  
நான் எழுதிய சார்லி சாப்ளின் கதையை
இந்த முகவரியில் இணைத்திருக்கிறது..!

கீற்று இணைய தளத்திற்கு...

நன்றி!
Clicky Web Analytics