"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!"

Sunday, November 29, 2009

புலியடிக்கும்....!

புலியடிக்கும் வரை...


Image and video hosting by TinyPic




ஏன் பிறந்தோம்
என்றிருந்த
எம் தமிழர்கள் எல்லோருக்கும்
மகனாய்
(பிரபாகரா)நீ பிறந்தாய்...!

சிங்களச் சிங்க குரல் கேட்டு கேட்டு
மனித குழந்தையாக
இருந்த நீ
புலி மகனானாய்...

அசைய அசைய
கையும் காலும் கூட
ஆயுதமானது...!

புலியும் வேண்டாம்
சிங்கமும் வேண்டாம்
மனிதர்களை
மனிதர்களாக வாழவிடுங்கள்
என்றார்கள்
சமாதானப் குருட்டு சிங்கங்கள்!

தமிழனின்
சதைத் தூண்டு
வாயில் தொங்கும்
சிங்கள சிங்கத்திற்கு
உங்கள் மனித பாஷை
எப்படிடா கேட்கும்?
அட ,அறிவு கெட்ட மடப் பதரே!

புலிகள் எல்லாம் காலி
எனற
சொன்ன சிங்கள சிங்கங்கள்

பாதுகாப்பாய்
பதுங்கியபடி
புலிக் காய்ச்சலோடு...

புலியடிக்கும் வரை...

புலிக் காய்ச்சல் அடிக்கும்...!





_மனிதன்.

http://www.primaldesign.dk/images/man_standing_portable.jpg







Photobucket


பதிவுகளை மின்னஞ்சலில் பெற விருப்பமா ? கீழே உள்ள படத்தின் மேல் அழுத்துங்கள்...!...




http://www.geckoandfly.com/wp-content/uploads/2009/05/email_marketing_software_advertising_make_money.jpg





Update me when site is updated
Share/Save/Bookmark

Friday, October 2, 2009

♥ மனிதன் .....! ♥

"மனிதன் .....!"
சிறுகதை


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgf1D8o0uyFi6fvwqYHDrwwIFmVnlI8EOHJkQ9yqQUZo1yY1bpVjNi72riDx75rt40FLno92kTbLnsAn_OlL8iOgy2hiPJtyVGCQGaCbGtwC3ja2bP6WjY9Z5MjURE86Z4S-qtcdJteD9U/s320/autorickshaw.jpg

செ
ன்னை...

அந்த ஆட்டோவில், அந்த கர்ப்பிணி பெண், வலி,சிணுங்கல் கொஞ்ச கொஞ்சமாக அதிகமாகவே, வெட்கத்தை விட்டு அழவே ஆரம்பித்து விட்டாள்!

அதற்கு மேல் வண்டியை வேகமாக விரட்டினால்...பயணம் சுகமாக இருக்காது, என்பதால் நிதானமான வேகத்தில் என் ஆட்டோவை விரட்டினேன்.

பிரசவ வலி தான் மனித வலிகளிலேயே மிகவும் கடுமையான வலி!
இதை மென்மையானவள் என்கிற பெண் தான் தாங்கிக் கொள்கிறாள்.

ஆனால் ஆணாதிக்க உலகம் என்னடா வென்றால் ஆண் தான் வலிமையானவன் என்கிறது.

மரணம் என்பது ஆணுக்கு ஒரு முறை தான் வருகிறது.

ஆனால் பெண்ணுக்கோ மரணம் குறைந்தது இரண்டு முறையாவது வந்து போகிறது, பிரசவம் என்கிற பெயரில்...

தாயின் பிரசவத்தில் பிறந்து, தானும் ஒரு குழந்தையை பெற்றுப் போட்டுவிட்டு, அற்ப ஆயுளிலேயே உயிரை விட்டு காற்றில் கரைந்து போகிற பெண்கள் ஏராளம், ஏராளம்!

ஆணை விட பெண்ணே குழந்தை பெற்றுக் கொள்வதில் அதிகம் ஆர்வம் காட்டுகிறார்களாம்.

இந்தியா போன்ற ஜனத் தொகை மிகுதியான நாட்டில், இந்த பொட்டைங்களுக்கு இந்த மாதிரி புத்தி தேவையா? என்று என்னை நானே கேள்வி கேட்டுக்கொண்டேன் .

யாரோ ஒரு அமைச்சரோ, முதல்வரோ அந்த வழியாக போகிறார்கள் என்பதால் போக்குவரத்தையே நிறுத்தியிருந்தார்கள்......

http://topnews.in/healthcare/sites/default/files/pregnancy_1.jpg

மிருகங்களுக்கு
மனித மனங்களை படிக்க தெரிகிறதோ இல்லையோ. கெட்ட எண்ணங்களை சுமந்து அலைகிற மனிதர்களை கண்டால் ஒதுங்கிக் கொள்ளும்.
தமிழ்நாட்டுக்கே முதலமைச்சர் முத்தமிழன் என்றாலும் அவர் கை பட்ட எதையும் அவர் வீட்டு நாய் சாப்பிடுவதே இல்லை என்ற உண்மை, உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? "கறை பட்ட கை என்பதாலோ?" முத்தமிழனுக்கு வயது, "அரசு வேலை பார்க்க இனி தகுதியில்லை உனக்கு வயதாகி விட்டது நீ வீட்டுக்குப் போகலாம்" என்று வீட்டுக்கு அனுப்புகிற 60 வயதோடு 20 வயதை கூட்டிக் கொள்ளுங்கள். அது தான் நம் முதல்வர் முத்தமிழனின் வயது. இன்று ஒரு விழாவில் பங்கேற்க தயாராகிக் கொண்டிருந்தார்.அவர் வீட்டு நாய் இருக்கும் பகுதிக்கு இவர் தான் போனார். அவர் வீட்டு நாய் அலட்சியமாய், கேவலமாய் ஒரு பார்வை பார்த்தது விட்டு திரும்பிப் படுத்துக் கொண்டது. முத்தமிழனுக்கு பயங்கர கோபம் வந்தது. போயும் போயும் நாயிடமா நம் கோபததைக் காட்டுவது என்று அடக்கிக் கொண்டார். "நாய் கூட சண்ட போடுறீங்களே இதில யார் நாய்,யார் மனுசன்னே எனக்குத் தெரியல" என்று சரியாகத் தான் திட்டுவாள் முத்தமிழனின் மனைவி. "நான் வெளியில போகும் போது, இந்த சனியனை என் கண்ணில காட்டாதீங்கன்னு நான் எத்தன தடவை சொல்லியிருக்கேன். இந்த வீட்ல யாருக்கும் அறிவில்ல" என்று சப்தமாக கத்தினார். "நாய் இருக்கிற பகுதிக்கு நீங்களா தான் போனீங்க. நாய் உங்ககிட்ட வரல". வீட்டுக்குள்ளிருந்து முதல்வரின் ஆறாவது மனைவி கிண்டலாக, நமட்டுச் சிரிப்போடு சொன்னாள். விழாவுக்கு நேரம் நெருங்கியதால் நம் முத்தமிழன் தன் பங்களா வீட்டு வாசலில் வந்து நின்று எல்லா வீடுகளிலிருந்து ஏதாவது ஒரு தலையாவது தெரிகிறதா என்று சுற்றும்முற்றும் பார்த்தார். ஒரே ஒரு காக்கை மட்டும் இருந்தது.அதுவும் கூட இவரை கண்டுகொள்ள வில்லை! பாத்துக்குங்க நான் தான் இந்த தமிழ்நாட்டுக்கே (அய்ந்து வருஷ ராஜா.அப்புறம் என்னங்க, அடுத்த தேர்தலில வெற்றி பெற்றால் தானே இவர் முதல்வர் பதவியில் மீண்டும் நீடிக்க முடியும்?)ராஜா அப்படின்னு காட்ட நெனச்சார், யாரும் பாக்கல வருத்தத்தோடு வண்டியில் ஏறி உட்கார்ந்தார். பூனைப் படை பாதுகாப்போடு முதல்வரின் ஊர்வலம் ஆரம்பமானது... "ஊழல் பெருச்சாளிக்கு கறுப்பூனைப் படை பாதுகாப்பு!" போகிற வழியில்..... 80 வயதில் 18 வயது இளைஞனைப் போல சுறுசுறுப்பாக இயங்கும் சூரியனே! உங்களை வாழ்த்த வயதில்லை, வணங்குகிறோம். இப்படிக்கு கூமுட்டைத் தொகுதி தறுதலைகள் என்று கலர் கலரா சுவரொட்டி ஒட்டியிருந்தார்கள்...
jhon.jpg image by mokkaimhokan வாகனங்களின் வரிசை நீளமானது...! அந்த கர்ப்பிணிப் பெண் பெரிதாக அலற ஆரம்பித்து விட்டாள்! "நான் சொல்றத மட்டும் யாரும் எதுவும் கேள்வி கேக்காம செய்யுங்க..!" என்றேன். அந்த பெண்ணின் கூடவே வந்த கணவன் கால் பக்கம் பிடிக்க, நான் தலைப் பக்கம் பிடித்து தூக்கினோம்.அந்த பெண்ணின் தாய் முதுகுப் பக்கம் பிடித்துக் கொண்டாள். அந்த பெண்ணை நடுச்சாலையில் உட்கார வைத்தேன். வெயில் சூடு ஆரம்பிக்கிற நேரம். சட்டென்று என் சட்டையை கழற்றினேன்.ஓடிப் போய் என் ஆட்டோவில் இருந்த இன்னொரு காக்கி நிற சட்டையை சாலையில் விரித்து, அந்தப் பெண்ணைப் படுக்க வைத்தோம். செய்தியறிந்து எங்களின் மூன்று தலைகளோடு மக்கள் கூட்டம் சேர்ந்து முப்பது தலைகளானது. காவல்துறையினரும் நெருங்கி வந்தனர். "இங்க என்ன இவ்வளவு கூட்டம்?" என்று கேட்டார் காவல்துறை அதிகாரி ஒருவர். "முதல்வர் வருகிற நேரம் ஒரமா போங்க,இல்ல நான் கடுமையா நடந்துக்க வேண்டியிருக்கும்.முதல்ல அந்த முதல்வர் போகட்டும்.அப்புறந்தான் யாரா இருந்தாலும் போக அனுமதிக்க முடியும்" என்றார். "இந்த பெண் இப்ப செத்துப் போய்ட்டான்னு வைச்சுக்குங்க, மீண்டும் உயிர் தர முடியுன்னு உங்க அதிகாரத்த வைச்சு,இல்ல, அந்த முதல்வரால தான் செத்துப் போன பிறகு உயிர் பிழைக்க வைக்க முடியுமா? முடியுமுன்னா சொல்லுங்க. நாங்க ஓரமா காத்திருக்கோம்... மக்களை பாதுகாக்கத் தான், அவருக்கு முதல்வர் பதவி,உங்களுக்கு வேலை,இந்த சீருடை" என்று ஆவேசமாகத் தான் வார்த்தை வெளியில் வந்து வெடித்தது! "இப்ப என்னை என்னா பண்ணச் சொல்றீங்க?என்றார்" காவல் துறை. சாலையின் மறுபக்கம் இந்த ஆட்டோவ போக விட்டா போதும் அந்த பெண்ணை மருத்துவ மனையில் சேர்த்திருவேன் என்றேன்,நான். யாரிடமுமோ அந்த காவல்துறை அதிகாரி, தொலைபேசியில் தொடர்பு கொண்டார். "இங்க வர பத்து நிமிடமாகுமா, நன்றி!" என்று இணைப்பைத் துண்டித்தார். "நீங்க சாலையின் மறுபக்கம் போகலாம், ஆனால் சீக்கிரம்....!" என்று அடுத்த கட்டளையை பிறப்பித்தார்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhhK1uhBBF2zPVn3UTX0d-7Yq9zlGS3rKTLaEXnpCJSvoI3d2OGkR2Px4K-8ZGbMz8gHXLKcly9c-B7VFjx91nDgvt1WVcT3YtQTuV4KAJZNEoCzNXFecmrhJlk5N8Nc_KAf3q83UtPj_0/s400/auto.jpg

மருத்துவமனையில் சேர்த்து வாசல் வரை வந்து விட்டேன். யாரோ பின்னால் ஒடி வருவதை உணர்ந்து, திரும்பினேன். அந்த கர்ப்பிணிப் பெண்ணின் தாய் மூச்சு வாங்க என்னை நோக்கி, ஓடி வந்து கொண்டிருந்தாள். "தம்பி! உன் பெயர் என்னப்பா?" என்று கேட்டாள். சொன்னேன். "என் பேரப் பிள்ளைங்களுக்கு உம் பேர தான் வைப்பேன். நான் ஒரு உயிருக்கு மட்டுந்தான்ப்பா தாய் , ஆனா நீ ரெண்டு உயிர காப்பத்துன்ன தாய்!" என்றாள். என்னால் ஆட்டோவை ஓட்டமுடிய வில்லை. திரும்பிப் பார்த்தேன். அந்த தாய்க் கிழவி, தன் சேலைத் தலைப்பால் ஒரு கையில் தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டு,இன்னொரு கையால் நான் போகிற திசைப் பக்கம் டாட்டா காட்டிக் கொண்டிருந்தாள், நெடுநேரம்... என்னால் எதிரில் வரும் வாகனங்களை சரியாகப் பார்க்க முடியவில்லை. எல்லாம் மங்கலாகத் தெரிந்தது.ஓர் ஓரமாக வண்டியை நிறுத்தினேன். என் கண்களில் கண்ணீர் மழை...!

_மனிதன்.

http://www.primaldesign.dk/images/man_standing_portable.jpg







https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh_p2TtwooHorAYxGOnnMUWLREOpTUt8hluvRpKggNfmoKXpPpFq-0aqPbc7mEIEzMA8CW9Qt5qR6xRhMxF0uYEEbEZxaeIV2UE5Ojt6DtkZn52pERrtzG2atQeDPzT6M6a69kPnbc42la5/s400/INSIDE+INDIA+AUTO.jpg

பதிவுகளை மின்னஞ்சலில் பெற விருப்பமா ? கீழே உள்ள படத்தின் மேல் அழுத்துங்கள்...!...



http://www.geckoandfly.com/wp-content/uploads/2009/05/email_marketing_software_advertising_make_money.jpg



Update me when site is updated




Share/Save/Bookmark

Thursday, October 1, 2009

♥ காந்தி தேசமே....! ♥



http://www.serailway.gov.in/hq/public/images/gandhi_boy.gif

காந்தி தேசமே....!


கள்ள நோட்டில்
உன் படத்தை அச்சடித்து
உன் பிறந்தநாளை
கொண்டாடினோம்....!

(சோனியா )காந்தி என்று
உன் பெயர் வைத்து
நாங்கள் சிங்களனுக்கு
ஆயுதம் அனுப்பினோம்...!

உன் பிறந்தநாளில்
ஒயின் ஷாப் விடுமுறையாம்...
கூடுதலாக
ரூபாய் நோட்டு கொடுத்து
பதுக்கல் சரக்கு வாங்கி...
தண்ணி அடிச்சோம்...

எல்லா இம்சைகளையும்
கண்ணை மூடி
ஏற்றுக் கொள்ளும்
எங்களுக்கு ....!

போதை தெளிந்தாலும்
எங்களுக்கு
புத்தி தெளியவில்லை....!
காந்தி....!



-மனிதன்.


http://www.primaldesign.dk/images/man_standing_portable.jpg








FunFunky.com

http://im.rediff.com/money/2009/may/05pay3.jpg





http://10hot.files.wordpress.com/2009/05/sonia-gandhi-durga-election-congress-party-2007-rahul.gif




பதிவுகளை மின்னஞ்சலில் பெற விருப்பமா ? கீழே உள்ள படத்தின் மேல் அழுத்துங்கள்...!...



http://www.geckoandfly.com/wp-content/uploads/2009/05/email_marketing_software_advertising_make_money.jpg



Update me when site is updated




Share/Save/Bookmark

Friday, September 4, 2009

♥ சோனியா காந்திக்கு ஒரு காதல் கடிதம்! ♥


http://www.antalya.de/divers_images/ci_love.jpg



http://1.bp.blogspot.com/_8Pq71MgHq1k/SCC5D6jzvZI/AAAAAAAAAHM/Ez9Yygs47sg/S220/valluvar05.jpg
http://rlv.zcache.com/love_letter_sticker-p217807358427092844qjcl_400.jpg





"ஒரே நாளில் செத்துப் போனவர்கள் நிம்மதியானவர்கள்" என்கிறான், தினம் தினம் செத்துக் கொண்டிருக்கும் முள் வேலி முகாம் தமிழன்!


இங்கோ தமிழீழத் தமிழனை காப்பாற்றச் சொல்லி " லவ் யூ! சோனியா காந்தி!" என்று ஒரே காதல் கடிதங்களாக எழுதிக் குவித்துக் கொண்டிருக்கிறார்,

தமிழின...மானமிகு...மாண்புமிகு... டாக்டர்... முத்தமிழ்...


சிரிக்காதீங்க...!


கலைஞர் யார் கிட்ட வேண்டுகோள் விடுறார் தெரியுமா?


பொம்பள ராசபக்சே சோனியாக்கிட்ட...


[dog_kn.jpg]



சிரிக்காதீங்க...!


ராசசேகர ரெட்டிங்கிற ஆந்திர மாநில முதல்வன் ஹெலிகாப்டர்ல போய் மலையில மோதி மண்டைய போட்டுட்டாராம்!


அமெரிக்கா, இஸ்ரே, மசுரே ஹெலிகாப்டர் எல்லாம் வந்து தேடுதாம், செத்த போன உடலை...


அதே ஆந்திராவில இந்தியாவுக்கே சோறு போட்ட விவசாயிங்க கொத்து கொத்தா, கூட்டம் கூட்டமா தற்கொலை பண்ணிக்கிட்டு செத்தாங்க.அப்ப எல்லாம் எந்த மயிராண்டிகளும் வரலங்க.


"அரசன் உசிரு தான் உசிரு, மத்ததெல்லாம் மசிரா?"


இந்திய மாநிலங்களில் எந்த மாநிலத்திலும் நடக்காத அதிசயத்தை நிகழ்த்தி கட்டினார், கலைஞர். ராசசேகர ரெட்டி மரணத்துக்கு ஒரு நாள் விடுமுறை என்று.
ராஜபக்சே,ராஜசேகர ரெட்டி என்ற பெயர் ஒற்றுமை கலைஞருக்கு பிடித்துப் போய் விட்டதோ?


இலட்சம் தமிழர்களின் உயிர்களை கொன்ற,தின்ற, இரத்த வாயால் இலங்கையில் போர் முடிவுக்கு வந்து விட்டது என்றான்,சிங்கள நாய்!

அது இவரின் ஆட்சியின் போது தானே, நடந்தது. அப்போதெல்லாம் எந்த கண்டன விடுமுறை அறிவிப்பையும் விட வில்லையே கலைஞர், ஏன்?
பெயரில் மட்டுந்தான் இருக்கிறது கருணை!


http://files.posterous.com/talkout/GOkQGd8aESmtWT6yRAE1X4P9W0j9toXEXeykAZGQqDDUrcvqZFAR9QZzd8VN/image001.jpg?AWSAccessKeyId=1C9REJR1EMRZ83Q7QRG2&Expires=1252075486&Signature=raaTYmDOg%2FjxyVXeyKGrkr40GQE%3D


கர்நாடக முதல்வனைப் பார்த்ததும் ஓடிப் பிடித்து அண்ணா,தம்பி! என்று கட்டிப்பிடித்து புதிய உறவு முறையை கொண்டாடினார் ,கலைஞர்.
தண்ணீர் தராத கர்நாடக முதல்வன் கலைஞருக்கு சகோதரனாகத் தெரிகிறார்.
சரியான தேர்வு தான்!
உன்னைப் போல் ஒருவன்!


சரி!


இதையெல்லாம் தட்டிக் கேட்க வேண்டிய தமிழ்நாட்டுத் தமிழன் என்ன செய்கிறான்,தெரியுமா?

http://www.pampakannadakoota.org/images/hindu-gods-ganesha.jpg

ஏற்கனவே உலகிலேயே அதிக நாட்கள் முட்டாள் மூடப் பண்டிகைகளுக்கு விடுமுறை விடுகிற நாடு இந்தியா தான் என்கிறது, ஒரு அதிர்ச்சியான தகவல்!


கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தின்னு அதாங்க, அதுங்களுக்கு பிறந்த நாளு...

அதுங்களுக்கு எத்தனையாவது பிறந்த நாளுன்னு கூட தெரியாமலேயே...வருஷா வருஷம் கொண்டாடுறான்,தமிழன் !

எல்லாத்தையும் பிள்ளையார் காப்பாத்துவாருன்னு சொல்லி, வெக்கமில்லாம பிள்ளையார காப்பத்த போலிஸும் கூடவே போகுது ஊர்வலத்தில...

அந்த பிள்ளையார் மட்டும் உயிரோட வந்து ஏன்டா என்ன வச்சு இப்படி பொம்ம விளையாட்டு விளையாடுறீங்கன்னு ,இவனுங்கள எல்லாத்தையும் பந்தாடுவரைக்கும் இவனுங்க தொல்ல தாங்க முடியாது , அது நடக்கிறவரைக்கும் இவனுங்க அடங்க மாட்டானுங்க!

http://67.59.186.119/CGI-BIN/py.cgi/000110A/http/1.bp.blogspot.com/_ceHeCYPjQpg/STNkqar2GzI/AAAAAAAAAgI/0ThzwDXteUs/s320/1.jpg
சரிங்க!

ராஜசேகர ரெட்டி மரண விடுமுறையை தமிழன் எப்படி கொண்டாடினான் தெரியுமா?


வீட்ல உக்காந்து, அதாங்க நம்ம நமீதா செல்லம் நடிச்ச படத்த நாலாவது தடவைய கொலைஞர் டிவியில சே! கலைஞர் டிவியில பாத்து கெக்க பிக்கன்னு அர்த்தமில்லாம விழுந்து சிரிச்சு துக்கம் கொண்டாடுறான், தமிழன்!

http://www.thaaimann.com/wp-content/uploads/2009/07/seelanrygesye.jpg

சரிங்க,
தேர்தல் சமயத்திலயாவது நம்மாளு யோசிப்பான்னு பாத்தா. ரொம்ப சுத்தம்!

அப்பவும் அப்படித்தான் எதையோ தொலைச்சவன் மாதிரியே திரியிறான்.

சொன்ன நம்ப மாட்டீங்க!

விட்டா ராஜபக்சேவுக்கு கூட ஓட்டைப் போட்டு தமிழக முதல்வானாக்கிருவான் தமிழன்!
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi_F_qvHaFWLQp2J9o6SxQ9g_f1lPnEkB9mNHeLEFVVCu-ZO2zc9mtW3x5vwLhPK8Ygd9MXwz3ssiw8BN8FrOa6NczRB4PcG38KYUBZTtY8u2cJCFB8akRRoiBLgQCgaQdSWZCL5v70cak/s400/hunters.gif
உண்மைதாங்க!
அந்த எல்லா தகுதிகளோடயும் ஒரு தினுசா ஒரு வித்தியாசப் பிராணியாத் தான் திரியிறான், தமிழ்நாட்டுத் தமிழன்!

_ஆதிசிவம்,சென்னை.


http://www.tamilkathir.com/uploads/images/aaivu/2009/06/25_07_07_jaffna_%20sla%2001.jpg




http://www.bambooproject.com/images/email_icon5.jpg
Share/Save/Bookmark

Sunday, August 9, 2009

♥ குண்டு விழுந்த பூமியிலிருந்து...! ♥

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgi4MnzQuPUrMejS-vvo5B8vYoBr1MzxO-4RlBpqf2SFJnwj9RwKHg2BasKHZDhP-YMayNK4nnWyDorKfwUcyYWjEQvl_sO7G0dyeitoo8JI25Ni4y-9BSxHAvKPWHSSWsNxZ06G0GRbBqG/s320/eye-crying.jpg
அம்மா
செத்துப் போனது
தெரியாமல் பால் குடிக்கிறது,

குழந்தை...

தூக்க நினைக்கிற

எனக்கு...
இரண்டு கைகளிலும்
பாதி இல்லை.


_ஆதிசிவம்,சென்னை.


fenci_mother_child.jpg

Share/Save/Bookmark

டாக்டர் படம் கொடுத்தவன நடுரோடில ஓட..ஓட... விட்டு...!

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEilWXE1Tsvw3wKgSmprachNtgdSORDiWtYP_02dXug1j9dyxj57NSbDu1gCjVxRUS7vHw25KrNbIzRpEJeTN4DakMzhEy6hOImTfEuz5vOf_qAUwiMM9xhct4KNJvojDsKREMJgwRqV_88/s320/ind_t2.jpg











https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjGLAVH1ysYJctisjNXxhw1Svi1nXW0ObNUeGzMMrIbGbMJvKGPX9cmQYAtXpYBSqUtCjGv_XvL5rYXCgZrhtiCwq9vcIxp44MhUEBRdFGbXiqEjQk4Gql4fS2sRQzMXW1uZQqWNDRkhr0z/s400/lattestumbrella.jpg

துணை முதல்வர் ஸ்டாலின் சென்னையை சிங்காரச் சென்னையாக மாற்றுவேன் என்றார்.

புதிதாக சென்னையில் கட்டி முடிக்கப்பட்ட பாலங்களில் வாகனங்கள் ஓட்ட. நீங்கள் சர்க்கஸ் வித்தைக்காரர்களாக இருக்க வேண்டும்..!. சென்னையில் கால் மணிநேரம் மழை பெய்தால் முழங்கால் அளவுக்கு சாலையில் நீர் ஓடும்...!

பைக் ஆசாமிகள் இந்த தண்ணீரைக் கண்டால் மகிழ்ச்சி சாக்கடை நீர் போல் பொங்கி வரும்,எருமைப் பாய்ச்சல் தான், போங்க! திருவாளர் பொது சனம் மழையில் நடக்கவென்று ஒரு நடையே வைத்திருக்கிறார். கிழிந்த குடையை கையில் பிடித்து, பார்த்துத் பார்த்து கால் வைக்கும் அழகே அழகு தான்! இந்த இலட்சணத்தில் சமீபத்தில் டாக்டர் பட்டம் வேறு நம்ம ஸ்டாலினுக்கு அண்ணா பல்கலைக்கழகம் வழங்கி கவுரவித்திருக்கிறது. இப்படி டாக்டர் பட்டம் கொடுக்கிற ஆள தர தரன்னு இழுத்து வந்து நடுரோட்டில் ஓட ஓட விட்டு.... வேற ஓன்னும், தப்பான ஆசை எல்லாம் கெடையாதுங்க...!
முகத்தில சேற வாரி அடிக்க (ஆசை)ணும்...!

_ஆதிசிவம். சென்னை

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhRNAGFYm4MOG7k0j3w3TniWoTxjg12QTDZi320taykgaEeeNy6td6LU1DBh6t1lPZTX3vzWYzlNKZxZvZ0qf0gRbzcXDvvzG4cySqCE_XU-kLNGHpEy-j291SNPwHQvipkfk3xqS3-JiQ/s400/Chennai+after+rain.jpg


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgSSO0G0QtpNQR9f-OvvuO6kx_zsg9rUzGsqaYDP8BDKmuSwPZ2zPI56ADba3ulYj8o4ZExTFUuviQhuVXZmF1NY8_ZC3UKYH35sGMXpUMlyNTqtjaL_RoeuaTkyFUd-fne_Vdb8NHpVdU/s400/chennai-03.jpg

http://vaanathinkeezhe.com/wp-content/uploads/2008/10/61166557_9019f9e3fe.jpg
Share/Save/Bookmark

மின்னஞ்சல் வழியே உடனடியாகச் சூடாகப் புதியப் பதிவுகளைப் பெற...

Enter your email address:

Delivered by FeedBurner

Labels

Blog Archive

Search This Blog

Followers

About Me

My photo
e m@il: (loveable@poetic.com) (foryouths@beyouths.com) (mobile 9941463500)

உங்கள் கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்

Guestbook

என் வலைப் பூக்கள்...!

"நான் எப்போதும் மழையில் நடக்க விரும்புகிறேன். அப்போதுதான் நான் அழுவதை யாரும் பார்க்க முடியாது" -சார்லி சாப்ளின்


 என் வலைத்தளத்தில்
 www.nee-naan-nilaa.blogspot.com
  
நான் எழுதிய சார்லி சாப்ளின் கதையை
இந்த முகவரியில் இணைத்திருக்கிறது..!

கீற்று இணைய தளத்திற்கு...

நன்றி!
Clicky Web Analytics