"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!"

Showing posts with label அரசியல் கலாட்டா காமெடி. Show all posts
Showing posts with label அரசியல் கலாட்டா காமெடி. Show all posts

Sunday, March 29, 2009

பூந்தோட்டமா, வாழ்க்கை?



காலை பத்து மணி...


எதிர் எதிரே வரும் வண்டியோட்டிகள் மொபைல் போனில் பேசியபடியே வண்டியோட்டி,அறிவியல் சாதனத்தை அவமானப் படுத்திப் போய்க்கொண்டிருந்தார்கள்.








ஒரு பிச்சைக்காரன் இரண்டு சாலைகளையும் பிரிக்கும் தடுப்புச்சுவரில் வானத்தைப் பார்த்து படுத்து காலை ஆட்டிக்கொண்டு , பரபரப்பாக சென்ற எல்லா சென்னைவாசிகளையும் கிண்டல் செய்து கொண்டிருந்தான்.




வழியில் என் உயிர் நண்பனை சதிஷ் என்னோடு சேர்ந்து கொண்டான்.


தலை மயிர்(வழுக்கை) போனது பற்றி கவலைப்பட்டான்.


என் ஈழத்து வீரத் தமிழன் உயிரையே மயிராக துச்சமாக நினைத்து போர்களத்தில் நிற்கிறான்.


"வாடா! என் தமிழ்நாட்டுத் தமிழா!" என்றேன்.


இன உணர்வு, தமிழன், இலங்கைத் தமிழர்களின் பிணத்தை வைத்து நடத்துகிற அரசியல்....


இந்த வெங்காயம் எல்லாம் வேண்டாங்க.




மனிதனை ,மனிதன்(சிங்களன்?) கொல்கிற காட்சிகளை பார்த்துக் கண்ணை மூடிக் கொண்டு போவது தான் மனிதத் தன்மையா?



திடீரென்று இலங்கைத் தமிழர்கள் மீது பத்திரிக்கைகளுக்கு பாசம் பொத்துக் கொண்டு வருகிறது.



கொலை, கொள்ளை,கற்பழிப்புப் புகழ் தினசரிகள் கூட, ஏன் நடிகைகளின் நாய்களைப் பற்றி எழுதும் வார இதழ்கள் கூட இலங்கை படுகொலை செய்திகளுக்கு, பக்கம் ஒதுக்க ஆரம்பித்திருக்கின்றன.


அந்த சாவுச் செய்திகளையும் தங்கள் பத்திரிக்கைகளில் வெளியிட்டு, விற்பனைகளை உயர்த்தி காசு பறிக்கும் உத்தி.


எது எப்படி இருந்தாலும், அதையும் வரவேற்போம்.


வேறு என்னத்தைச் சொல்ல?

அலுவலகத்தை தொட்டதும், அந்த தீச் செய்தீ எல்லோரையும் பற்றிக் கொண்டது. எங்கள் அலுவலக காரோட்டியின் மனைவி தீக்குளித்து செத்தே போய் விட்டாள்!





அலுவக ஊழியர்கள் அப்படியே மருத்துவ மனைக்கு கிளம்பினோம்.


எங்கள் அலுவலக காரோட்டி சரியான குடிகாரன். அந்த பெண் வேலைக்குப் போய் சம்பாதிக்கிற காசைக்கு கூட வாங்கிக் குடித்து விடுவான். ஏற்கனவே இரண்டு முறை தீக்குளிக்க முயன்றிருக்கிறாள்,அந்த பெண். திருமணமாகி இரண்டு வருடந்தான் ஆகுகிறது. பிள்ளை எதுவும் இல்லை.அந்த திருமணக் கடன் கூட இன்னும் முடியவில்லை என்ற தகவல்களை நண்பர்கள் பகிர்ந்து கொண்டார்கள்.
அந்த குடிகாரனோடு வாழ்ந்து தினம் தினம் செத்துக்கொண்டிருப்பதை விட ஒரே நாளில் மொத்தமாக செத்துப் போய் விடலாம் என்று அந்த பெண் முடிவெடுத்து விட்டாள்.

நானும் ஒரு நாள் குடிச்சேங்க. எங்க ஊர் மதுரையில நன்னாரி என்கிற வாசனையான வேர் போட்டு செய்த சர்பத் மாதிரி இருக்கும் என்கிற நினைப்பில...


பெப்சி, கோக், மிராண்டான்னு பூச்சிக் கொல்லி மருந்துகள் வந்த பிறகு மதுரையில் இப்பவெல்லாம் அந்த சர்பத் கிடைக்கிறதே இல்ல. கடை கடையாக தேடினாலும், அவ்வளவு எளிதில் கிடைக்கிறதில்லிங்க.


அந்த சர்பத் நினைப்பில தண்ணி கூட கலக்காம குடிச்சுப் பாத்தேன்ங்க. சகிக்க முடியாத சுவை.


இதுக்குப் போயா இந்த மனிதர்கள் அடிமையாக கிடக்கிறார்கள் என்று மனிதர்கள் மேல் கோபமும், பரிதாபமும் கூட வந்தது.


அதுதான் முதலும் கடைசியும்.அதுக்குப் பிறகு நான் குடிக்கிறதே இல்லைங்க.

பிணவறை வந்தது. பிணவறை ஊழியர் மூக்கைப் மூடிக்கொண்டு போய் பாருங்க என்று கதவை திறந்து விட்டார்.


நான் வேண்டுமென்றே மூக்கை மூடிக் கொள்ளாமல் உள்ளே நுழைந்தேன்.


காரணம்?


உண்மையின் வாசனையை எதற்கு பொய் கொண்டு மறைக்க வேண்டும்...? என்கிற ஞான(?)க்கிறுக்குத் தான்.


ஆனால் அது எவ்வளவு பெரிய விபரீதம் என்பதை பிணம் பார்த்து வந்த பிறகு தான் தெரிந்தது.


காய்ந்த மிளகை வெறும் சட்டியில் வறுத்தால் வருமே நெடி, அதற்கு இணையான நெடி, தொண்டையிலும் கசப்பாக நின்றது. வாந்தியும் குமட்டலும் வந்தது...


கதவோரம் பிறந்து, ஒரு வருடம் கூட முழுமையடையாத குழந்தை ஒன்று துணி விரிப்பில் அழகான ரோஜாப்பூப் போல கண் மூடி தூங்கிக் கொண்டிருந்தது.


இந்த குழந்தையுமா இறந்து விட்டது, என்று கண் கலங்க அந்த பிணவறை ஊழியனிடம் நம்ப முடியாமல் கேட்டேன்.


ஆம்! அதோ! அந்த குழந்தையின் தாய் என்று காட்டினான் பிணவறை ஊழியன்.


அந்த தாய் அழுவதும்,அழுகையை நிறுத்தி விட்டு மொபைல் போனில் யாரிடமோ அடிக்கடி பேசுவதுமாக இருந்தாள்...


ஆயிரமாயிரம் கோவில்களில் கிடைக்காத ஞானத்தை,வாழ்க்கைத் தத்துவத்தை அந்த பிணவறை எனக்கு கற்றுத் தந்தது.


நண்பர்கள் எல்லோரின் முகத்திலும் அமைதி. அதுவரை சலசலவென்று பேசிக் கொண்டு வந்தவர்கள். பேச முடியாத மவுனத்தில் இருந்தார்கள்.




அப்போதுதான் தலை நசுங்கி , சூடாக இரத்தம் வழிய இறந்து போன பிணத்தைக் கொண்டு வந்த ட்ராபிக் போலீஸிடம் காசு(இலஞ்சம்) வாங்கிய பிறகே பிணத்தை இறக்கிய பிணவறை ஊழியர்களின் அஞ்சாத நெஞ்சை, நேர்மையை(?) எண்ணி எண்ணி வியந்தேன்!


அந்த ட்ராபிக் போலீஸ் யாரிடம் இலஞ்சமாக வாங்கினானோ,அந்த இலஞ்சப் பணத்தை?


குடிகாரனுக்கு போன் போட்டு சொல்லி விட்டு அலுவலகம் போகலாம் என்று முடிவெடுத்தோம்.


வைத்திருந்த மொபைல் போனையும் விற்றுக்குக் குடித்து விட்டதாக மேலும் ஒரு அதிர்ச்சியான செய்தியை யாரோ சொன்னார்கள்.

அந்த குழந்தையை விட, அந்த தாய் ரொம்ப அழகாக இருக்கிறாள் என்றான்,சதீஷ்.


அடிக்க கையை ஓங்கினேன், என் கைகளில் சிக்காமல், என் கைக்கெட்டும் தூரத்தைத் தாண்டி ஓடினான் சிரிந்தபடி, சதீஷ்.


அது ஒரு அரசு பொது மருத்துவமனை. அந்த மருத்துவ மனை கட்டியபோது சுவற்றுக்கு அடிக்கப் பட்ட வர்ணப் பூச்சாக இருக்க வேண்டும். பாதி உதிர்ந்து போய்க் கிடந்தது. ஒரு ஆம்புலன்ஸ் வண்டி ஒன்று பெயிண்ட உதிர்ந்துபோய், தொட்டால் பொல பொலவென்று உதிர்ந்து விடும் நிலையில் இருந்தது.


இப்படி எங்கு எங்கு நோக்கினும் அலங்கோலங்கள்...


இதே இந்தியாவில் உலக பணக்காரர்களின் பட்டியலில் இடம் பெற டாட்டா பிர்லாக்கள்,அம்பானி பன்னிகளோடு, கலைஞர் கருணாநிதி குடும்பங்களும் வரிசையில் நிற்கின்றன.


சுவிஸ் வங்கியின் இரகசிய திருட்டுக் கணக்கில் இந்திய பணந்தான் முதலிடம் வகிக்கிறது என்கிறது, பத்திரிக்கைக் குறிப்பொன்று.


இந்த நாட்டுக்கு எந்த நாடு ஈடு? என்று ஆனந்த தாண்டவமாடியது மனம்.


ஒற்றைத் தனிமனிதன் உண்டு கொழுக்க, ஒட்டு மொத்த நோயாளியாய் கிடக்கிறது, இந்தியா!
அலுவலகத்திற்கு கிளம்பினோம்.






திடீரென்று சதிஷ் கதறி அழ ஆரம்பித்தான்.


கண்களில் நீர்...


குடிக்கிறது எவ்வளவு பெரிய அசிங்கம்ன்னு உணர்ந்துட்டேன் .குடி ஒரு பெண்ணையே கொன்னுடுச்சு. ஒரு பொண்ண கொன்ன அவனெல்லாம் ஒரு மனுசனா? இல்ல குடிச்சுட்டு வந்து நிக்கிற நானெல்லாம் ஒரு மனுஷசனா? குடிகாரனுங்க எல்லாம் கொலைகாரனுங்க... என்று நீட்டி முழங்கிக் கொண்டே போனான்,சதீஷ்.




சதீஷ் எப்ப ஒயின்ஷாப் போனான்? அவன் பேச்சுக்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியாமல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டு நின்றோம்...!

ஆதிசிவம், சென்னை.



இந்த பதிவின் முகவரியை மட்டும் அடைய/கருத்துச் சொல்ல...

http://beyouths.blogspot.com/2009/03/blog-post_29.html#links

எல்லா பதிவுகளையும் மின்னல் வேகத்தில், பார்வையிட்டு வெளியேற......
http://feedproxy.google.com/beyouths/bImA
Share/Save/Bookmark

Sunday, February 22, 2009

வாழ்க்கை கெடக்குது ரோட்டோரமா....!

Day 55/365 : Life is Beautiful by Gooner-Licious.

வாழ்க்கை கெடக்குது ரோட்டோரமா...

இலங்கையில் இனப்படுகொலை தலை தூக்கிய போது, திலீபன் என்ற இலங்கைத் தமிழன் அதைக் கண்டித்து,உண்ணா விரதம் இருந்தே,இறந்து போனான்.அவனை சாக விட்டு வேடிக்கை பார்த்தது,சிங்கள அரசு.

நீ தூக்க வேண்டிய ஆயுதம் எது என்பதை நம் எதிரிகள் தானே தீர்மானிக்கிறார்கள்?

ஆயுதங்களோடு எழுந்தது விடுதலைப் புலிகள் இயக்கம்.நெல்லுக்குப் பக்கத்தில் முளைக்கும் புற்களைப் போலவே வேறு சில இயக்கங்களும் ஆயுதம் தாங்கி முளைத்தன.


ஒரு பக்கம் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக போர்க்களத்தில் நிற்பதாக காட்டிக் கொண்டு,இன்னொரு பக்கம் விடுதலைப் புலிகளை சிங்களனுக்குக் காட்டிக் கொடுக்கும் வேலையையும் சரியாக செய்தது. புலிகள், அந்த மாதிரி இயக்கங்களை கண்டறிந்து இன்றும் கூட அழித்தது கொண்டிருக்கிறன.


ஒரு பெண் தன் கற்பைக் காப்பாற்றிக் கொள்ள,கற்பழிக்க வந்தவனை,தற்காப்புக்காக கொலையும் செய்யலாம் தப்பில்லை என்றும்,

கொலை செய்தவனை விட, கொலை செய்ய தூண்டியவனுக்கே அதிகமான தண்டனை வழங்க வேண்டும் என்கிறது நம் இந்திய தண்டனைச் சட்டம். 6000 ஆண்களையும், 1000 இலங்கைத் தமிழ் பெண்களையும், இந்திய அமைதிப் படை என்ற பெயரில் அனுப்பி, கற்பழித்துக் கொல்ல காரணமாக இருந்த ராஜீவ் காந்திக்கு என்ன தண்டனை வழங்குவது?


ராஜீவ் காந்தி படுகொலை செய்யப் படவில்லை. அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது.

அத்தனைக்கும் ஆசைப்படு என்று குமுதம்,ஆனந்த விகடனில் எழுதுகிற "சாமியர்களை(?)"ப் போல...
கணக்கில்லாமல் பொண்டாட்டிகள் வைத்துக் கொண்டகோவலன் கலைஞர், கண்ணகிக்கு சிலை வைக்கிறார். தலைவனின் வழியை தொண்டர்களும் பின்பற்றினால்...?

நாடு என்னாகும்...?


இலங்கையில் உண்மையான விடுதலை வேண்டும் என்று உயிரைக் கொடுத்து போராடுகிற அமைப்புகளை,அசிங்கப் படுத்துவதாக நினைத்துக் கொண்டு, அதற்கு போட்டியாக,போட்டி அமைப்பை ஒன்றை தானே, உருவாக்கி தன்மேல் தானே அசிங்கத்தைப் பூசிக் கொள்கிறார்,கலைஞர்.

ராஜீவ் காந்தி என்ற ஒற்றை யோக்கியனுக்காக,இலங்கையில் இருக்கிற அத்தனை தமிழனும் செத்துப் போக வேண்டும் என்று உள்மனசில் நினைத்துக் கொண்டு, வெளியில் இலங்கைத் தமிழர்களுக்காக பொய் ஒப்பாரி வைக்கிற காங்கிரஸ் கூட்டத்தைக் கூட சேர்த்து கொண்டு பொய்க் கண்ணீர் வடிக்கிறார். நம் முதலைக் கண்ணீர் முதல்வர்.
இலங்கைப் பிரச்னையைக் காட்டி என் ஆட்சியை கவிழ்க்கப் பார்க்கிறார்கள் என்று தொடை நடுங்கிப் போகிறார்,நம் கலைஞர்.
மனிதன் உண்ணுகிற உணவைத் தவிர எல்லாமே, மனிதனே ஏற்படுத்திக் கொண்ட ஆடம்பரங்கள். இந்த செயற்கை ஆடம்பர மனிதர்களால்,உணவு,உடை,இருப்பிடம் பறிக்கப்பட்ட சாலையோரவாசிகளின்...

வாழ்க்கை கெடக்குது ரோட்டோரமா...!


அவர்களுக்கு மூன்று வேளை உணவு கூட ஆடம்பரம்,அடுத்த வேளை உணவுக்குக் கூட வழியில்லாத நம் பெருமைமிகு பாரத தேசத்தில்...


எதைச் செய்தும் பணக்காரனாகி விட வேண்டும் நினைக்கிற குறுக்கு வழி,கிறுக்குப் புத்தி அம்பானிகளை என்ன செய்யலாம்?
ஒன்னும் செய்ய வேணாங்க.




கம்பி வைச்ச கதவு இருக்கிற அறையில அடைச்சு வைச்சு, மூனு வேளையும் சாப்பாட்டுக்குப் பதிலா...

பணத்தாட்கள்,நாணயங்களை கொடுத்தா போதுங்க.அதுங்களே, தானா செத்துரும்.நமக்கும் வேல மிச்சம்.


இந்த இந்திய அம்பானி பன்னிகளோடு போட்டி போடுகிற அளவிற்கு கலைஞர் அவர்களே உங்கள் குடும்பத்தின் சொத்தும் உயர்ந்திருக்கிறது... இன்னும் எதற்கு பதவிப்பித்து?

இலங்கையைப் பிரித்துக் கொடுத்தால் பிரபாகரன் சர்வாதிகாரிப் போல நடந்து கொள்வார் என்கிறார்கள்.
கல்யாணம் ஆகாமலேயே,பிறக்காத பிள்ளைக்கு என்ன பெயர் வைப்பது என்று கட்டிப் புரண்டு மண்டையை உடைத்துக் கொண்டு சண்டையிட்டார்களாம்,மடையர்கள். அவர்களின் அந்த பேச்சைப் போலத் தான் இருக்கிறது,இந்த பேச்சும்.

"இலங்கைத் தமிழர்கள் வேறு..................று........!
விடுதலைப் புலிகள் வேறு..........................று...! "

என்றும் ஒரு குரல் கேட்கிறது.


தலையை மட்டும் விட்டு விட்டு முண்டத்தை(உடலை) மட்டும் காப்பாற்றத் துடிக்கிற... முண்டங்கள்...இவர்கள்...!

விடுதலைப் புலிகளை விட்டு விட்டு இலங்கைப் பிரச்னைக்கு தீர்வு காணவேண்டும் என்று யாராவது பேசினால் அது,இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த மூடநம்பிக்கைகளில் ஒன்று என்று எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.

கலைஞர் தமிழர்களின் இன துரோகி என்று வைத்துக் கொண்டால்...

புரச்ச்ச்...சீ தலைவி ஜெயலலிதா தமிழர்களின் எதிரி.ராஜபக்சேவின் அக்கா அல்லது தங்கை போலத் தான் பேசுவார்.இருவரின் உடம்பிலும் ஓடுவது ஹிட்லர் இரத்தம்,அதுங்க அப்படித்தான் பேசும்.

சென்னை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நம் கலைஞர் (சென்னையில் ஓடும் கூவம் நதி எல்லாச் சாக்கடைகளும் சங்கமிக்கும் வற்றாத ஜீவ நதி)
இந்த கூவத்தைச் பளிங்கு போல சுத்தம் செய்து,இந்த நதியில் பழங்கால தமிழறிஞர்கள் நீராடியதைப் போல,நம் பிள்ளைகள் எல்லாம் குளிப்பதை நான் காண வேண்டும் என்று தன் அடங்காத அல்ப ஆசையை வெளியிட்டார்.

உடனே,

அடுத்து பேச வந்த தாத்தாவாகிப் போன இளைஞர் அணித் தலைவர் ஸ்ஸ்..டாலின்" அப்பா உங்கள் காலத்திலேயே, அந்த ஆசை நிறைவேறும்" என்றார்.

ஆம்! நண்பர்களே அரசியல் பன்றிகளுக்கு சாக்கடையைப் பற்றித்தான் கவலை

My life.. upside down.. by ω ά ς ά β ι’.

காவிரி நீர் பிரச்னை நெருப்பாக பற்றிக் கொண்டபோது முதல்வர் கலைஞர் சொன்னார்.கர்நாடகாவில் தேர்தல் வரப் போகிறது,அதுவரை பொறுமையாக இருங்கள் என்றார். தமிழகத்திலும் ஆட்சி மாறப் போகிறது.

எந்த பலனுமில்லை.


அரசியல்வாதிகளுக்கு அடுத்த தேர்தல் பற்றித் தான் கவலை...

வாருங்கள்..!

நண்பர்களே...!
நாம் அடுத்த தலைமுறை பற்றிக் கவலைப்படுவோம்.....!


-ஆதிசிவம்,சென்னை.





இந்த பதிவின் முகவரியை மட்டும் அடைய/கருத்துச் சொல்ல...
http://beyouths.blogspot.com/2009/02/blog-post_22.html#links


எல்லா பதிவுகளையும் மின்னல் வேகத்தில், பார்வையிட்டு வெளியேற......

http://feedproxy.google.com/beyouths/bImA
Share/Save/Bookmark

Wednesday, February 11, 2009

எவன் ஒருவன்



எவன் ஒருவன்,

தன் கண்ணுக்கு முன்னாள்

நடக்கிற அநியாயத்தைத் தட்டிக் கேட்கிறானோ....

அவனே என்னை சேர்ந்தவன்.....!


_சே குவேரா







இந்த பதிவின் முகவரியை மட்டும் அடைய/கருத்துச் சொல்ல...
http://beyouths.blogspot.com/2009/02/blog-post_11.html#links

எல்லா பதிவுகளையும் மின்னல் வேகத்தில் , பார்வையிட்டு மீள...
http://feedproxy.google.com/beyouths/bImA



Share/Save/Bookmark

Wednesday, February 4, 2009

இப்படிக்கு மாணவன்

இப்படிக்கு மாணவன்






வீரத்தமிழ்மகன் கு.முத்துகுமாரின்

தியாகத்தை ஊர் ஊராகச் சொல்ல
நீண்ட விடுமுறை அளித்து உதவிய
தமிழக அரசுக்கு நன்றி!

இப்படிக்கு
தமிழக மாணவர்கள்

(குறிப்பு: இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக வகுப்புகளை புறகணித்து போராடும் தமிழக மாணவர்களை கொச்சைப் படுத்தி விடுமுறை அளித்து வீட்டுக்கு அனுப்பிய,தமிழக சிங்களத் தலைவர் கலைஞரை (ராஜபக்சே)கிண்டலடித்து ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டி, இது)






Share/Save/Bookmark

Sunday, February 1, 2009

தீத் தமிழன்

"தீத் தமிழன்...!"

"தற்கொலை-கோழைகள் எடுக்கும் வீரமான முடிவு "

எனக்கு கைப்பேசியில் அடிக்கடி மின்னஞ்சல் பார்க்கும் கெட்ட பழக்கம் இருக்கிறது.29-01-09 அன்று வேலைக்குப் போகும் அவசரத்திலிருந்த, நான் யாரோ ஒரு முத்துக்குமார் என்பவர் இவ்வளவு அதிகாலையில் ,காலை 7.40 மணிக்கே மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறாரே,அவர் நம் இமெயில் குழுவுக்கு அனுப்பிய முதல் மின்னஞ்சல் அது. அது தான் கடைசி மின்னஞ்சலும் கூட என்று எல்லாம் முடிந்த பிறகுதான்
தெரிந்தது.கலங்கிப்போனேன்..!


அவசரத்தில் அதன் அர்த்தங்களை சரியாக உள்வாங்கிக் கொள்ளாமல் அழித்த மின்னஞ்சலை மீண்டும்,மாலை தோண்டி எடுத்து மீட்டு திரும்பத் திரும்ப படித்த பிறகு தான் எனக்கே புரிந்தது.உயிர்வலியோடு தன் தற்கொலை செய்தியையும் முன்னமே பதிவு செய்து அதையே சிறு சிறு துண்டறிக்கையாக,அதே மின்னஞ்சல் செய்தியை அச்சிட்டு,நுங்கம்பாக்கத்தில் இருக்கிற மத்திய அரசு இயங்குகிற
கட்டிடங்களுக்கு முன்னால், எல்லோரிடமும் அந்த துண்டறிக்கைகளை கொடுத்து விட்டு, தன்னைத் தானே பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொண்டான்,என்று.


அவர் மின்னஞ்சலில் வந்த அந்த தற்கொலைச் செய்தீ:


என் உடலை காவல்துறை அடக்கம் செய்து விட முயலும்,விடாதீர்கள்.என் பிணத்தைக் கைப்பற்றி அதைப் புதைக்காமல் ஒரு துருப்புச்சீட்டாக வைத்திருந்து போராட்டத்தைக் கூர்மைப் படுத்துங்கள்.எனக்கு சிகிச்சையோ போஸ்ட்மார்டமோ செய்யப் போகும் தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி மானவர்களே உங்கள் கையால் அறுபட நான் புண்ணியம் செய்திருக்க வேண்டும்


அவன் எரிந்து கரிக்கட்டையாக மண்ணில் சாய்ந்த போது நேரம் காலை 10 மணிக்கு மேல் ஆயிருந்தது.


100 விழுக்காடு காயம் என்பதால்,காப்பற்ற முடியவில்லை என்கிறது மருத்துவ அறிக்கை.


"இன்னும் ஒரு மணி நேரந்தான் உயிரோடு இருப்பேன் அதற்குள் நீங்கள் என்ன கேள்வி வேண்டுமானாலும் கேட்டுக் கொள்ளுங்கள்" என்று போலீஸ்காரர்களிடம் தெளிவாக,வார்த்தை தடுமாறாமல் பேசியிருக்கிறான்.


"இவ்வளவு புத்திசாலியான நீ சாகத் துணியலாமா? "என்று கேட்டிருக்கிறது காவல்துறை.


என்னைப் போல நிறைய புத்திசாலிகள் இலங்கையில் சாகிறார்களே,அந்த சாவைத் தடுக்கத்தான் இந்த முடிவு என்று மரணம் வாக்கு மூலம் வழங்கிய பிறகு...


உயிர்பிரிந்த நேரம் மதியம் 12.30


முத்துக்குமார் தங்கியிருந்த தன் தங்கை தமிழரசியிடம், முத்துக்குமாரனின் போட்டோ கேட்டு வந்த பிறகுதான் தெரிந்ததாம் தீக்குளித்த செய்தி!


காலை அய்ந்து மணிக்கே எழுந்து வீட்டை விட்டே போய்விட்டதாக முத்துக்குமாரனின் தங்கை கதறுகிறாள்.


அவன் கைப்பேசி எண்ணும் அவன் அனுப்பிய மின்னஞ்சலில் இருந்தது.


எதையாவது பேசி அவன் சாவைத் தடுத்திருக்கலாம் என்ற குற்ற உணர்வு என்னை வாட்டுகிறது.


எப்படியாவது,எதை செய்தாவது வாழ்ந்து விட வேண்டும் என்று அர்த்தம் இல்லாமல் வாழ்கிற மனிதர்களில்,மற்றவர்களுக்காக வாழ்வது தான் அர்த்தம் உள்ள வாழ்க்கை என்று வாழ்ந்த முத்துக்குமாரனின் இழப்பு என்னை கொஞ்சம் அதிகமாவே பாதித்தது.


உயிரோடு இருந்தால், இன்னும் நிறைய ஆக்கப்பூர்வமான செயல்களை செய்திருக்கலாமே என்ற ஆதங்கம் என்னை வாட்டுகிறது.


ராஜீவ்காந்தி கொலையைக் காட்டி விடுதலைப்புலிகளை எதிர்க்கிற காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் யாரும் ராஜீவ்காந்தியோடு செத்துப் போகவில்லை ஏன்? என்ற ராஜீவ்காந்தி கொலையை பற்றி விசாரித்த விசாரணை கமிஷன் கேட்ட கேள்விக்கு அந்த காங்கிரஸ் கட்சி, இன்று வரை பதில் சொல்ல வில்லை.


இதையும் முத்துக்குமாரன் தன் இறுதி அறிக்கையில் பதிவு செய்திருக்கிறான்.


தனக்குள்ள எக்கச்சக்கமான சொத்துகள் அரசுடமையாகி விடும் என்ற கேவலமான அச்சத்தில் சுதந்திரபோராட்ட வீரரானவர் பண்டித ஜவஹர்லால் நேரு என்கிறது,சரித்திர உண்மை.


இதே காரணத்திற்காகத்தான்,தமிழ்நாட்டைச் சேர்ந்த மூப்பனரும் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார் என்கிறது ,சரித்திரம்.


இப்படிப்பட்ட அயோக்கிய ஏமாற்றுப் பரம்பரையில் பிறந்த ராஜீவ் காந்தி மட்டும் எப்படி யோக்கியமானவராக இருக்க முடியும்?.அந்த உத்தம காந்தி மீது நிரூபிக்கப்பட்ட போபர்ஸ் பீரங்கி ஊழல் குற்றச்சாட்டு, அவர் இறந்த பிறகும் கூட,இன்னும் உயிரோடு இருக்கிறது.


தற்கொலை செய்து கொள்ளாமல்,வேறு ஏதாவது வழியில் அவன் தன் எதிர்ப்பை காட்டியிருக்கலாம் என்று ஒரு கருத்து ஊர்வலமாக வருகிறது...

எதை செய்திருந்தால்,இலங்கையில் அமைதி திரும்பும் என்ற கேள்விக்கு ,இங்கே யாரிடமும் நேர்மையான பதில் இல்லை.


மாலைப் பத்திரிக்கைகளில் எந்த பத்திரிக்கைகளிலும் முத்துக்குமரனின் போட்டோவோடு செய்தி வெளியிடவில்லை.


ஆனால் நம் வலைப் பதிவர்கள்,நிறைய பேர் நிருபர்களாக இருப்பதாலே என்னவோ புகைப்படத்தை தங்களின் வலைத் தளங்களில்,பத்திரிக்கைச் செய்திகளை விட முந்தி, அந்த படங்களை தங்களின் தளங்களில்,உடனே வலையேற்றி இருந்தார்கள்,அந்த அளவிற்கு விஞ்ஞான வளர்ச்சி, வேகம்...


இது இப்படி இருக்க...


இலங்கைப் போர் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக,அடுத்த தலைமுறையிலும் தொடரும் வெட்கக் கேடும் இதே பூமி பந்தில் தொடர்ந்து கொண்டிருக்கிறது...
நமக்கு பக்கத்திலேயே...


பத்திரிக்கைகளில் ,சென்னை பதிப்பு மாலைமுரசு பத்திரிக்கை மட்டும் கொஞ்சம் கூடுதல் அக்கறையோடு முத்துக்குமாரின் செய்திகளை வெளியிட்டு இருந்தது.


விடுதலைப் புலிகளை காட்டி இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக வாய் திறப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோள்,


மனிதர்கள் தான் மனிதர்களைப் பற்றி கவலைப் படுவார்கள்...


பேசத் தெரிந்த மிருகங்களே!...
நீங்கள் கொஞ்சம்
மவுனமாக இருங்கள்.


தமிழ்நாடே இந்த நெருப்புச் செய்தி கேட்டு சுடுகாட்டு அமைதியோடு இருந்த சமயத்தில்...


ஒரு கொடூரமான காமெடி விழாவும் சிறப்பாக நடந்தது.


தன் சொந்த சகோதரன் வளர்ச்சியைக் கூட பார்க்க சகிக்காமல்,தயாநிதி மாறனின் தினகரன் பத்திரிக்கை அலுவகத்தை சேர்ந்த இரண்டு பேரை ஆட்களை ஏவி கொன்ற,"ஐந்தமிழ் அறிஞர்" (சென்னையில் கலைஞர் கட்சியினரின் சுவரோட்டி வாசகம் ) கலைஞரின் மகன்,இப்படி எதற்கும் அஞ்சாத "அஞ்சா நெஞ்சன் மு.க.அழகிரி" அவர்களுக்கு(கிட்டத்தட்ட அரசு பணியாளராக இருந்தால் ஓய்வு பெறும் வயது)தன் 58 ஆவது
பிறந்தநாளை கொண்டாடிக் கொண்டிருந்தார்.


நானும்,என் அண்ணன் அழகிரியும் இரட்டைக் குழல் துப்பாக்கி என்று கலைஞரின் இன்னொரு மகன் மு.க.ஸ்டாலின் மைக் பிடித்து புளந்து காட்டியிருக்கிறார்.


யாரைக் கொல்ல..?


வாழ வேண்டிய வயதில் ஒரு இளைஞன்,இங்கே ஒரு பொது பிரச்னைக்காக கருகிக் கரிக்கட்டையாக கிடக்கிறான்.


நாட்டுக்காக உழைப்பேன் என்று நா கூசாமல் ஆட்சியைப் பிடித்த கூட்டம் நாடே இழவு வீடாகக் கிடக்கும்போது கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடிக்கொண்டிருக்கிறது,.


இந்த வக்கிரப்புத்திசாலிகளின் கைப் பிடிக்குள் தான் தமிழ்நாடே இருக்கிறது...


என்னக் கொடுமைங்க ,இது... ?



கண்ணீர் துளிகள்...


மருத்துவமனையில் முத்துக்குமாருக்கு சிகிச்சை கொடுத்தபடியே அவரிடமிருந்து வாக்குமூலமும் வாங்கப்பட்டது. அங்கிருந்த டியூட்டி மருத்துவர் முன்னிலையில் நுங்கம்பாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் முரளி யிடம் முத்துக்குமார் பேசினார். முரளி, 'அலுவலகக் குறிப்புக்காகத் தேவைப்படுகிறது... தம்பி, நீங்க என்ன சாதி?' என்று கேட்க, 'நான் தமிழ் சாதி...' என்று அழுத்திச் சொன்னாராம். கூடவே, 'எந்த சாதியும் இருக்கக் கூடாது என்றுதான் போராடிக் கிட்டு இருக்கேன். அது மட்டுமல்ல, எத்தனையோ அறப்போராட்டங்கள் இருக்க, நான் இப்படியரு முடிவைத் தேடியதற்குக் காரணம்... என்னால்தான் இலங்கைப் பிரச்னைக்கு விடிவு காலம் பிறக்கும். என்னுடைய இந்த முடிவு விடுதலைப்புலிகள் இயக்க சகோதரர் பிரபாகரனுக்குச் சென்றடைய வேண்டும். இந்திய அரசு, இலங்கைப் பிரச்னையில் குருடாக இருக் கிறது. அதற்குப் பார்வையூட்டத்தான் என்னுடைய இந்த முடிவு...'' என்று தீர்க்கமாகச் சொல்லிவிட்டு, மயக்க நிலைக்குச் சென்று மரணத்தைத் தழுவிவிட்டார் முத்துக்குமார்.
(நன்றி : ஜூனியர் விகடன்)


கவிஞர்,பாடலாசிரியருமான தாமரை,நடிகர் சத்யராஜ்,நடிகர் வடிவேல் போன்றவர்கள் உடலைக் கண்டு கதறியழுதார்கள்.

முத்துக்குமாரின் மரணம் போரில் மாண்ட விடுதலைப்புலிகளுக்குச் சமம்.
-தொல்.திருமாவளவன்.

முத்துக்குமார் என்ற இளைஞர் ஈழத்தமிழர்களுக்கு ஆக்ஸிஜன் கொடுத்து விட்டு இறந்திருக்கிறார்.
-இயக்குநர் பாரதிராஜா

விடுதலைப் புலிகள் தான்,இலங்கைத் தமிழர்கள்.இலங்கைத் தமிழர்கள் தான்,விடுதலைப் புலிகள்.இன உணர்வு தமிழர்களுக்கு இருக்கக் கூடாது என்று தடை போட யாருக்கும்,எவனுக்கும்,இங்கே உரிமையில்லை.
-இயக்குநர் ஆர்.சுந்தராஜன்.

அவன்
உடலில்
ஏற்றிக் கொண்ட
தீயை
நாம் உள்ளத்தில்
ஏற்றிக் கொள்வோம்..!
-மாலை முரசு,சென்னை பதிப்பு.

நீ இறந்தும் வாழ்கின்றாய்...
நாங்கள்
வாழ்ந்து கொண்டிருந்தாலும்...
பிணங்கள்..!


-ச.ராமானுசம்
www.nellairamanujam.blogspot.com

ஜனவரி 31-2009 அன்று ,சென்னை கொளத்தூரில் மாலை 3.30 மணிக்கு தொடங்கிய இறுதி ஊர்வலம்,ஏழே கால் மணிநேர ஊர்வலத்திற்குப் பிறகு இரவு 10.45 மணிக்கு மூலக் கொத்தளம் வந்தடைந்தது.


இறுதி ஊர்வலத்திற்கு எந்த அரசியல் கட்சியும் கொடிபிடிக்க கூடாது என்று வேண்டுகோள் விடப் பட்டிருந்தது.




எம்மை மண்ணுக்குள் புதைத்தாய்...

எம் மண்ணை
எங்கே புதைப்பாய்...?

__உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன்.

www.beyouths.co.cc





Share/Save/Bookmark

Sunday, January 18, 2009

ஓ... பக்கங்கள்!






(வலை உலக மேதாவிகள் பெரும்பாலும்,காலையில் எழுந்து தூங்கப் போகும் வரை நடந்த நிகழ்வுகளையே தங்களின் சொந்த வலைத் தளங்களில் எழுதி நம்மையெல்லாம் தினம்,தினம் சாகடித்துக் கொண்டு வருகிறார்கள்.அந்த பதிவுகளை, படிப்பவர்கள் என்ன பயனடைந்து விடுவார்கள் என்று யோசிப்பதில்லை அல்லது யாரும் இங்கே யோசிக்கத் தயாராக இல்லை.இதோ நானும் அப்படிப்பட்ட ஒரு விபரீத முயற்சியில்
களம் இறங்கியிருக்கிறேன். பிறவிப் பயனடையுங்கள்!)



சென்னை.

2009 பொங்கல்,தமிழ்ப் புத்தாண்டு தினம்.


என் தூக்கம் கலைந்த போது, காலை பத்து மணிக்கு மேலாகியிருந்தது.மின்வெட்டால் மின்விசிறி எப்போழுதோ நின்று போயிருந்தது.


வாழ்க மின்சாரத் துறை!


செய்தித் தாள் வாங்க வேண்டும்.எல்லா தினசரிகளும் இப்படி சிறப்புத் தினங்களில் விற்றுத் தீர்ந்து விடும்.தமிழர்கள் வீட்டு டிவியோடு ஹேப்பி பொங்கல் கொண்டாட போய் விட்டதால்,கடைகள் மூடிக் கிடந்தன.


மார்வாடி,அடகுக் கடைக்காரன் மட்டும் எல்லா இடங்களிலும் கடை திறந்து உட்கார்ந்திருந்தான்.எப்படியாவது ஒரு தமிழனாவது தன் பொண்டாட்டி தாலியை அடகு வைக்க இங்கு வராமலா போய் விடுவான்? என்ற நம்பிக்கையோடு.


எல்லா தமிழ் தினசரிகளும் விற்று விட்டன.ஆனால் தினகரன்,சில ஆங்கில பத்திரிக்கைகள் மட்டும் வியாபாரமாகாமல் இருப்பதாக,இரண்டு கடைகளிலும் ஒரே பதிலைக் கடைக்காரன் சொன்னான்.


தமிழ் தினசரிகளில் "தினகரன்" மலிவு விலை என்றாலும் வாங்க ஆளில்லை!


இதைத்தான் கலைஞரின் மாபெரும் குடும்பம்,தன் சொந்த பேப்பர் என்பதால்,தன் சொந்த "சூரியன் FM" வானொலியில் தமிழ் நாட்டின் நம்பர் ஒன் பேப்பர் "தினகரன்" என்கிற பச்சைப் பொய் விளம்பரத்தை தினமும் வாய் கூசாமல் அளந்து விட்டுக் கொண்டிருக்கிறது.


ஒரு வழியாக பேப்பர் கிடைத்ததும் வீடு திரும்பினேன்.


வீட்டிலிருந்த கைப்பேசியில் மிஸ்ட் கால் பட்டியலில் அம்மா பெயர் இருந்தது.


அழைத்தேன். "பொங்கல் தீபாவளிக்காவது வீட்டுக்கு வந்து தொலைடா சனியனே! "என்று செல்லமாக விட்ட அர்ச்சனையைக் கேட்க சுகமாக இருந்தது.


வருவதாகச் சொன்னேன்.

இந்த வெட்டி ஆபிசரின் இன்றைய நிகழ்ச்சி?

சென்னையில் வருடந்தோறும் நடக்கும் புத்தகத் திருவிழாவுக்குப் போவது என்பது தான்.


போகும் வழியில்,ஒரு ஆட்டோக் காரரிடம்,ஒரு "உயர்வருவாய்" ( வேற்றுக்கிரக? ) சுகவாசி ஒன்று,தன் காரின் பெயிண்ட் போனதுக்காக போக்குவரத்தையே நிறுத்தி,நரம்பு புடைக்க கத்திக் கொண்டிருந்தது.





இந்த வகை "உயர்சாதி" நாய்கள் பெரும்பாலும் உண்மையான வறுமை,விலை உயர்வு, நாட்டு நலன் பற்றி கொஞ்சம் கூட வாய் திறக்காது என்ற உண்மை என் முகத்தில் அறைய நான் வேறு பக்கம் திரும்பிக் கொண்டேன்.


"சங்கமம்" என்ற கிராமக் கலை நிகழ்ச்சியை கலைஞர் பெற்ற கவிதை கனிமொழி சிறைச்சாலையில் நடத்திய நிகழ்ச்சியறிந்து என்ன ஒரு நகைச்சுவை உணர்வு அவருக்கு என்று வியந்து போனேன்!


கலைஞர் ஆட்சியில் நாடே திறந்த வெளி சிறைச்சாலையாக மாறி விட்ட பிறகு...


(சிறைக்கு)உள்ளே-வெளியே நாடகம் எதற்கு?


திருமங்கலம் இடைத் தேர்தலில் கலைஞர் கட்டுப்பாட்டில் இருக்கிற போலீசால் கட்டுப்படுத்த முடியாது என்று துணை ராணுவம் வாக்கு நடக்கும் இடத்தில் முகாம் இட்டச் சென்ற ஒற்றைச் செய்தியே ,அதைச் சொல்லும்!


"சோதிடம்" உன்னைத் தவிர எல்லாவற்றையும் நம்பு என்கிறது.

"தன்னம்பிக்கை"யோ உன் மேல் நம்பிக்கை வை,பிறகு மற்றவர்கள் உன் மேல் நம்பிக்கை வைப்பார்கள் என்கிறது.


இரண்டு எதிர் எதிர் தலைப்புகளில் இருக்கும் புத்தகங்கள் எப்படி சக்கை போடுகின்றன, என்னே தமிழனின் அறிவு என்றும் மெய் மறந்து நின்றேன்.


புத்தக அரங்கினுக்குள் நுழைந்தேன்...


"என் பிள்ளைக்கு தமிழே தெரியாது.அவனால எப்படி இந்த தமிழ் புத்தகத்தப் படிக்க முடியும்? அவன இங்கிலீஷ் மீடியத்தில சேத்திருக்கிறேன். செகண்ட் லாங்வேஜா ஹிந்தி எடுத்துப் படிக்கிறான்" என்று பெருமிதமாகச் சொன்ன,ஒரு தமிழ்த் தாயின் விபரீதப் பேச்சால், நான் தலை நிமிர்ந்தேன்!


"விடுதலைப் புலிகள்" என்ற புத்தகம் புத்தக அரங்கில் தடை செய்யப்பட்டிருக்கிறது.தேவையானால் பதிப்பக அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளுங்கள் என்று கிழக்குப் பதிப்பகத்திலிருத்து பதில் வந்தது.


இதே கலைஞர் இயக்கத்தை தடை செய்தது(லாடம் கட்டியது)காங்கிரஸ்,அன்று!


அதே காங்கிரஸ் சொல்லி,தடை செய்திருக்கிறது கலைஞர் அரசு, விடுதலைப்புலிகளை,இன்று!


வாழ்க ஜனநாயகம்!


"பாரதியார் கவிதைகள் இங்கிலீஷ்ல கிடைக்குமா? என் மகளுக்கு தமிழே வராது.அதான் இங்கிலீஷ்ல கேக்கிறேன்" என்று ஒரு பொறுப்பான தமிழ் அப்பா கேட்டார்,தமிழில்...


"அப்படியெல்லாம் எங்கேயும் கிடைக்காது "என்று முகத்தில் அடித்தாற் போல பதில் சொல்லி அனுப்பி விட்டார்,கடைக்காரர்.


அம்மாவின் வீட்டுக்குள் நுழையும் போது இரவு ஒன்றுக்கு மேலாகியிருந்து,அம்மாவைத் தவிர எல்லோரும் தூங்கிப் போய் விட்டார்கள்.


வீட்டிலிருந்த நாய் இந்த இரவு நேரத்தில உனக்கு வாலாட்டி எல்லாம் வரவேற்க முடியாது, போடாப் போ! என்பதைப் போல கண்களைத் திறந்து பார்த்து விட்டு,தூக்கத்தைத் தொடர்ந்தது.


"ஊர் உலகத்தில எல்லா பிள்ளைகளும் போல தானே உன்னையும் பாக்க ஆசைப்பட்டேன்,அது தப்பா? நான் செத்தக் கூட நான் நிம்மதியில்லாமத் தான்டா சாவேன்,அதுக்கு நீதான் தான்டா காரணம்" என்று உண்மையாகவே ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விட்டாள்,அம்மா.


கேட்டுக்கு கேட்டு சலித்துத்துப் போனதால்,நான் ஒன்றும் குறுக்கிட விரும்ப வில்லை.


இரவு என் அறைக்குத் திரும்பும் போது, இரண்டு மணிக்கு மேல் ஆகியிருந்து.


ஆரம்ப நாட்களில் தனியாக படுத்துக் கொள்ள,கொஞ்சம் வெறுமையாக இருந்தது, பழகப் பழக இப்பொழுதெல்லாம் அது ஒன்றும் பிரச்னையாகத் தெரியவில்லை.


மறுநாள் விடிந்ததும் வாந்தி வந்தது.


"வீட்டுச் சாப்பாடு உடம்புக்கு ஒத்துக் கொள்ளவில்லை" என்று பெரிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்தேன்.

(குறுங்கதை முற்றும்)








புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கி புத்தகங்கள்

1. மவுனப் பயணி
(பாரதிஜிப்ரானின் கவிதைத் தொகுப்பு,இது)


2.உலக சினிமா பாகம் 2
(செழியன் )


3.கனவைப் போலொரு மரணம்
-அ.வெண்ணிலா
(பரிசுப் பெற்ற கவிதை நூல்)


4.பெரியார் டைரி-2009


5.இயக்குநர்-நடிகர் சேரன்,கவிஞர் அறிவுமதி, தமிழர் தலைவர் கி.வீரமணி
(பெரியார் திடல் ஆடியோ CD),


6. ஓ...பக்கங்கள்..!
ஞாநி
(குமுதம்,ஆனந்தவிகடன் வார இதழ்களில் சமுதாய அவலங்களைச் சாடும் கட்டுரைகள்)
www.gnani.net


7.பாஸிடிவ் பாயிண்ட் 100






Share/Save/Bookmark

மின்னஞ்சல் வழியே உடனடியாகச் சூடாகப் புதியப் பதிவுகளைப் பெற...

Enter your email address:

Delivered by FeedBurner

Labels

Blog Archive

Search This Blog

Followers

About Me

My photo
e m@il: (loveable@poetic.com) (foryouths@beyouths.com) (mobile 9941463500)

உங்கள் கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்

Guestbook

என் வலைப் பூக்கள்...!

"நான் எப்போதும் மழையில் நடக்க விரும்புகிறேன். அப்போதுதான் நான் அழுவதை யாரும் பார்க்க முடியாது" -சார்லி சாப்ளின்


 என் வலைத்தளத்தில்
 www.nee-naan-nilaa.blogspot.com
  
நான் எழுதிய சார்லி சாப்ளின் கதையை
இந்த முகவரியில் இணைத்திருக்கிறது..!

கீற்று இணைய தளத்திற்கு...

நன்றி!
Clicky Web Analytics