"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!"

Showing posts with label kvithai. Show all posts
Showing posts with label kvithai. Show all posts

Saturday, January 24, 2009

மனித சாதி...!-கவிதை.















மனித சாதி...!-கவிதை.

எங்கள் ஊரில்...

மரங்களுக்கும் கூட
தாலி கட்டிப் பார்த்தார்கள்...

கழுதைகள்
தவளைகளுக்கும் கூட
கல்யாணம்
செய்து
அழகு பார்த்தார்கள்...!

ஒரு நாள்...

எதிர்த்த வீட்டு அக்காவும்
எங்க தெரு அண்ணனும்
ஊரை விட்டே
ஓடிப் போனார்கள்...

மனிதர்களாகப் பிறந்த அவமானத்தால்...

எந்த சாமியும்
வாய்
திறக்கப் போவதில்லை...!
நிரம்பி வழியும்
பாவ உண்டியல்
வாய்
திறந்து சொன்னது...!


www.beyouths.co.cc








Share/Save/Bookmark

Friday, September 5, 2008

கண்களை மூடி உறங்கும் கவிதை,நீ!





கண்களை மூடி உறங்கும் கவிதை,நீ!

பெண் சிசுக்களை, பெண்ணே சுமந்து பெற்றாலும் பிஞ்சிலேயே நஞ்சைக் கொடுத்து கொல்லும் அதிகாரம் ஆண்களுக்கே சொந்தம் என்கிறது ,நம் வெட்கம் கெட்ட சமுதாய அமைப்பு.

பெண்ணும் கூட அந்த கொடுமைகளுக்கு உடந்தையாக இருக்க வேண்டும் என்று நிர்பந்தம் செய்கிறது, நம் பெருமை மிகு இந்திய சமுதாயம்!

ஆனால்...

எங்கள் உடல், எங்கள் உரிமை என்கிறது அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் தொடங்கிய பெண்ணுரிமை இயக்கம்.பெண்களின் கருப்பை மீதான உரிமையை பெண்களே தீர்மானிப்பதாக இருக்க வேண்டும் என்கிறது,அந்த இயக்கம்!

வாழ்த்துவோம்!!





உங்களுக்குத் தெரியுமா?

மேக்-அப் போட்டே காலம் தள்ளும் பெண்கள் தான் தூங்கும்போதும் கூட, ஆண்களை விட அழகாக தூஙகுவார்களாம்!

பெண்ணை வர்ணிக்கும் கவிஞர்கள், கவிதைகள் பெருமைப் பட்டுக்கொள்ளலாம்!












_ஆதிசிவம்,சென்னை.
Share/Save/Bookmark

Saturday, July 12, 2008

"ரத்த ரோஜா"-கவிதை







ரத்த ரோஜா

முட்கள்
உதடுகளைக் கிழித்தாலும்

சிரிக்கத் தெரிகிறது..

ரோஜா!...


_ஆதிசிவம்,சென்னை.







Share/Save/Bookmark

Sunday, June 15, 2008

தப்பித்தது......! கவிதை


கடல் நீர் உப்பு
தப்பித்தது......!


குடித்தே தீர்த்திருப்பான் மனிதன்

-ஆதிசிவம்,சென்னை .

Share/Save/Bookmark

பிளாஷ்டிக் பூமி" கவிதை



பிளாஷ்டிக் பூமி" கவிதை
பிளாஷ்டிக் மனிதர்கள்


எழுபது சதம் தண்ணீரால் ஆனது பூமி
ஆனாலும்
விலைக்குத்தான் கிடைக்கிறது, தண்ணீர்!

தினம் தினம்
பசியால் செத்துக்கொண்டிருக்கும்
பூமியின் கைகளில்
50 பூமிகளை அழிக்க காத்திருக்கிறது
அணு ஆயுதங்கள்..

விலைவாசியைக் கட்டுப்படுத்த தெரியாத
வெடகம் கெட்ட- எங்களுக்கு
ராக்கெட் விடத் தெரியும்!


மனித இனத்தைத் தவிர
எல்லா உயிரினங்களும் அழிகிறதாம்
அதனால் என்ன
மனிதர்களே வித விதமான மிருங்களானபோது..

சாப்பிடும் உணவு தானியங்களிலிருந்து
பெட்ரோல் எடுக்கிறதாம், அமெரிக்கா
எல்லாம் ''தீர்ந்த'' பிறகு
''அவர்களின்'' பெட்ரோல் தொட்டியில் நிரப்ப
உங்களின் இரத்தமும் கேட்டு வருவார்கள்

அதுவரை
நாம் மவுனமாக இருப்போம்...
ஆம்! நாம் மனிதர்கள்!
பிளாஷ்டிக் மனிதர்கள்!...



-ஆதிசிவம்,சென்னை

Share/Save/Bookmark

மின்னஞ்சல் வழியே உடனடியாகச் சூடாகப் புதியப் பதிவுகளைப் பெற...

Enter your email address:

Delivered by FeedBurner

Labels

Blog Archive

Search This Blog

Followers

About Me

My photo
e m@il: (loveable@poetic.com) (foryouths@beyouths.com) (mobile 9941463500)

உங்கள் கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்

Guestbook

என் வலைப் பூக்கள்...!

"நான் எப்போதும் மழையில் நடக்க விரும்புகிறேன். அப்போதுதான் நான் அழுவதை யாரும் பார்க்க முடியாது" -சார்லி சாப்ளின்


 என் வலைத்தளத்தில்
 www.nee-naan-nilaa.blogspot.com
  
நான் எழுதிய சார்லி சாப்ளின் கதையை
இந்த முகவரியில் இணைத்திருக்கிறது..!

கீற்று இணைய தளத்திற்கு...

நன்றி!
Clicky Web Analytics