"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!"

Monday, July 28, 2008

" தவத்திரு குன்றக்குடி அடிகளார் "-அவர்களின் கதை-பாகம் 6







பாகம் 6
" தவத்திரு குன்றக்குடி அடிகளார் "-அவர்களின் கதை



காரைக்குடிக்கு அருகில் இருக்கும் ஊர்கள்தான் பிள்ளையார்பட்டியும், குன்றக்குடியும்.

குன்றக்குடியில் உள்ள சண்முகநாதர் ஆலயம் 900 வருடங்களுக்கு முற்பட்டது.1900 ஆண்டுகளுக்கு முந்திய சமணப் பள்ளியும்,ஏராளமான கல்வெட்டுகளும் காணப்படுகின்றன.மயில் போன்ற வடிவத்தில் இந்தக் குன்று அமைந்திருப்பதால் , இவ்வூருக்கு மயூரகிரி என்ற இன்னொரு பெயரும் இருக்கிறது.

1946-இல் பொன்னம்பல தேசிகர் முக்தியடைய ஆறுமுக தேசிகர் 44-ஆவது குரு மகாசன்னிதானமாகப் பட்டம் சூடினார்.அவர் முதியவராக இருந்தால், ஒரு ஆற்றல் மிக்க தம்பிரானை தன் வாரிசாக நியமிக்க வேண்டிய கட்டாய நிலைமைக்குத் தள்ளப்பட்டார்.

1948 ஆம் வருடம் ஆவணி மாதத்தில் குன்றக்குடியில் ஆண்டுதோறும் நடக்கும் ஆதீன குரு பூஜைக்கு வழக்கம்போல எல்லா ஆதீனங்களுக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பட்டன.

குரு பூசையில் கலந்து கொள்ள தருமபுர ஆதீனத்தின் பிரதிநிதியாக நம் கந்தசாமி தம்பிரானையும்,வழித்துணையாக சம்பந்த ஓதுவார் என்பவரையும் மாக சன்னிதானம் அனுப்பி வைத்தார்.

குரு பூஜையில் கலந்துகொண்ட நம் கந்தசாமி தம்பிரானின் புன்னைகைப் பூ முகம் குன்றக்குடி மடாலய ஊழியர்களின் மனதைக் கொள்ளையடித்தது.

குரு பூசைக்குப் பிறகு மாலையில் தர்பார் என்ற நிகழ்ச்சி நடைபெறும்.தலைமை வகித்த குன்றக்குடி மாகசன்னிதானம் அவர்கள், நம் கந்தசாமி தம்பிரானை வற்புறுத்தி பேச வைத்தார்.

பிறகு என்ன நடக்கும்? சும்மா விடவாரா?பிய்த்து உதறி விட்டார்,நம் கந்தசாமி தம்பிரான்.

பேச்சு நன்றாக இருப்பதாக, மாக சன்னிதானம் பாராட்டி,ஒரு தட்டில் ஆரஞ்சுப் பழங்களும்,பணமும் வைத்து திருக்கை வழக்கம்(அன்பளிப்பு)வழங்கி, தன் அன்பை ,மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார்.


அதன் பிறகு காரைக்குடி சோமசுந்தரம் பிள்ளை,குன்றக்குடி ஆதீன ஏஜெண்ட் நாராயணசாமி அய்யர் ஆகியோர்களுடன் மகா சன்னிதானம் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.வேறு என்ன நம் கந்தசாமி தம்பிரானை தமது வாரிசாக நியமிப்பது என்பது தான்.

பிறகென்ன மற்ற தம்பிரான்களை விட கந்தசாமி தம்பிரானுக்கு உபசாரம் தட புடலாக நடந்தது.அவர்கள் மேலும் இரண்டு நாட்கள் தங்கி இருந்து போகும்படி வற்புறுத்தப்பட்டார்.

அவர்களின் விருப்பப் படி 2 நாட்கள் தங்கி விட்டு, நம் தம்பிரானும்,சம்பந்த ஓதுவாரும் தருமபுரம் திரும்பி வந்தார்கள்.

தருமபுர மடத்தின் அளவிற்கு குன்றக்குடிமடம் செழிப்பானதாக இல்லை.தகர வாளி,தகவரக் குவளை ஆகியவற்றை பயன்படுத்தி வந்ததால்,குன்றக்குடி மடத்தை தகரக் குவளை மடம் என்றே தருமபுர மடாலய ஊழியர்கள் கேலியாகப் பேசினார்கள்.எல்லா நிலைகளையும் சமமாகப் பார்க்கும் நம் தம்பிரான் துறவிகளுக்குள்ளேயுமா பொருளாதார வேறுபாடு? என்று வேதனைப்பட்டார்.

ஒரு நாள் நம் தம்பிரான் அறையில் இலக்கியம் படித்துக் கொண்டிருந்தார். அறை முன் கார் வந்து நின்றது.அதிலிருந்து திருக்கடவூர் கைலாசம் பிள்ளையும், இன்னொருவரும் தம்பிரானின் அறைக்குள் புகுந்தனர்.

கைலாசம் பிள்ளையுடன் ஏற்கனவே நெருங்கிப் பழகி இருந்ததால் அவர்களிருவரையும் வரவேற்று உட்காரச் சொன்னார்.

என்ன விஷயம் என்று விசாரிப்பதற்குள், "உங்கள் பெட்டியில் உடைகளை எடுத்து வையுங்கள்,இப்போதே நாம் புறப்பட வேண்டும் என்று அவசரப்பட்டார்",கைலாசம்.

ஒன்றும் புரியாத தம்பிரான் ,"என்னை எங்கே அழைக்கிறீர்கள்", எனக் கேட்க...

"அதையெல்லாம் அப்புறம் சொல்லுகிறேன்.முதலில் நீங்கள் எங்களுடன் கிளம்புங்கள்", என்றார்.

"மகா சன்னிதானம் அவர்களிடம் அனுமதிபெற வேண்டும்.."

"வேண்டாம்...வேண்டாம் அனுமதி கேட்டால் காரியமே கெட்டுப் போகும்.
சொல்லிக் கொண்டு போகிற காரியமல்ல இது...முதலில் விஷயத்தை முடித்துக் கொண்டு, பிறகு வந்து சொல்லலாம்", என்றார்.

"விவரம் தெரியாமல் நான் வரமாட்டேன்".

"குன்றக்குடி ஆதீனத்தில் உங்களுக்கு இளவரசு பட்டம் சூட்ட விரும்புகிறார்கள்.விஷயம் தெரிந்தால், உங்களைக் குன்றக்குடிக்கு அனுப்பவே மாட்டார்கள்.ஆகவே பட்டம் பெற்ற பிறகு இங்கே வந்து சொல்லிக் கொள்ளலாம்".

சோரம் போகிற பழக்கம் நம் தம்பிரானுக்கு கிடையாது.அவர்கள் நடந்து கொண்டமுறை எரிச்சலை தந்தது.

"தயவு செய்து போய் வாருங்கள். எனக்கு பட்டமும் வேண்டாம்.ஒன்றும் வேண்டாம்", என்று அவர்களை விரட்டி விட்டார்.

குன்றக்குடி மாக சன்னிதானம் விட்டு விடுவதாக இல்லை.இரண்டாம் முறையும் நம் தம்பிரானுக்கு தூது அனுப்பினார்.

இம்முறை கைலாசம் பிள்ளையுடன்,காரைக்குடி சோம சுந்தரம் பிள்ளையும்,ஆற்றங்கரை முத்தையா முதலியாரும் வந்து சேர்ந்தார்கள்.தம்பிரான் எவ்வளவோ மறுத்தும் அவர்கள் விடுவதாக இல்லை.

"மகா சன்னிதானம் உத்தரவு இல்லாமல் வரவே மாட்டேன்", என்று நம் தம்பிரான் அடம்பிடித்தார்.

"சன்னிதானம் உத்தரவு அளித்தால் வருவீர்களா?"

"சரி!"

எனவே அந்த மூவரும் மகா சன்னிதானம் கயிலை குருமணியை அணுகினார்கள்.அவர் நம் தம்பிரானின் கருத்து எதையும் கேட்டு அறியாமலேயே," அனுப்ப இயலாது!", என மறுத்து அனுப்பி விட்டார்.

எனவே திருவாடுதுறை ஆதினத்தில் இருந்த வேறொரு தம்பிரானை குன்றக்குடிக்கு வாரிசுப் பட்டம் சூட்ட அழைத்துச் சென்றனர்.அங்கு மூன்று மாத காலம் வைத்து இருந்தனர்.மகா சன்னிதானத்திற்கு அவரைப் பிடிக்காததால் திருப்பி அனுப்பி விட்டனர்.

அதன் பிறகு மூன்றாம் முறையாக தருமபுரத்திற்குப் படையெடுத்தனர்.இம்முறை குன்றக்குடி தம்பிரான்,கைலாசம்,ஓதுவார் ஆகியோரும் வந்திருந்தனர்.

கைலாசத் தம்பிரான் அதிக வயதானவர்....


...சுவாமிகளின் பாதச் சுவடுகள் தொடரும்....



_ஆதிசிவம்,சென்னை.







Share/Save/Bookmark

No comments:

Post a Comment

வணக்கம்!

"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!


பதிவுக்கான மறுமொழிப் பெட்டி

நன்றி..!

♥ ஆதிசிவம்@சென்னை ♥

www.beyouths.blogspot.com

மின்னஞ்சல் வழியே உடனடியாகச் சூடாகப் புதியப் பதிவுகளைப் பெற...

Enter your email address:

Delivered by FeedBurner

Labels

Blog Archive

Search This Blog

Followers

About Me

My photo
e m@il: (loveable@poetic.com) (foryouths@beyouths.com) (mobile 9941463500)

உங்கள் கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்

Guestbook

என் வலைப் பூக்கள்...!

"நான் எப்போதும் மழையில் நடக்க விரும்புகிறேன். அப்போதுதான் நான் அழுவதை யாரும் பார்க்க முடியாது" -சார்லி சாப்ளின்


 என் வலைத்தளத்தில்
 www.nee-naan-nilaa.blogspot.com
  
நான் எழுதிய சார்லி சாப்ளின் கதையை
இந்த முகவரியில் இணைத்திருக்கிறது..!

கீற்று இணைய தளத்திற்கு...

நன்றி!
Clicky Web Analytics