

ஆப்பிள் தோட்டம்-கவிதை
கடவுள் நம்பிக்கை பெரிதா
தன்னம்பிக்கை பெரிதா
யோசித்தான்
தன்னம்பிக்கை இல்லாதவன்
பணக்கார சாமி தானே
எதுக்கு
(உயரமான)
உண்டியல்?
கள்ள வோட்டுக்கு
இரண்டாண்டு சிறைத் தண்டனை
நல்ல வோட்டுக்கு?
அய்ந்தாண்டு தண்டனை!
ஆப்பிள் சாப்பிடாதீர்
விலை அதிகம்
சொன்னாள்
ஆதாம் மனைவி ஏவாள்
_ஆதிசிவம்,சென்னை.



No comments:
Post a Comment
வணக்கம்!
"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.beyouths.blogspot.com