"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!"

Thursday, September 25, 2008

த.மு.எ.ச சிறுகதை போட்டி அறிவிப்பு


த.மு.எ.ச சிறுகதை போட்டி அறிவிப்பு


தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்தும் ‘கந்தர்வன் நினைவு சிறுகதைப்போட்டி’! -நா. முத்துநிலவன் -

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர்களில் ஒருவரும், மாபெரும் எழுத்தாளரும், இங்கு எங்களுடன் பல்லாண்டுகள் வாழ்ந்து இரண்டாண்டுக்கு முன் மறைந்தவருமான கவிஞர் கந்தர்வன் அவர்களின் நினைவாக ஒரு பெரும் சிறுகதைப்போட்டியை நடத்திடத் திட்டமிட்டிருக்கிறோம்.

ஒருவரே எத்தனை கதைகள் வேண்டுமானாலும் அனுப்பலாம். 11-09-2008 ஆம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பவேண்டும்.
படைப்பாளியின் சொந்தக் கற்பனையாகவும் எதிலும் வெளிவராததாகவும் இருக்கவேண்டும். பக்க, உள்ளடக்க வரையறை இல்லை. நடுவர் குழுவால் தேர்வு பெற்ற கதைகளுக்கு பரிசுகள் வழங்கப்படும்.



முதல் பரிசு ரூ.5,000
இரண்டாம் பரிசு ரூ.3,000
மூன்றாம் பரிசு ரூ.2.000







கதைகளை அனுப்ப அஞ்சல்/மின்னஞ்சல் முகவரி:

நா.முத்து நிலவன்,
(மாநிலத் துணைப் பொதுச்செயலர்-தமுஎச),
96, சீனிவாச நகர் 3ஆம் தெரு,
மச்சுவாடி - அஞ்சல்,
புதுக்கோட்டை-622 004 - தமிழ் நாடு.
மின்னஞ்சல்:naamuthunilavan@yahoo.co.in
செல்பேசி: 94431-93293.





------------ --------- --------- --------- --------- --------- --------- --------- --
நா.முத்து நிலவன், 96, சீனிவாச நகர் 3ஆம் தெரு, மச்சுவாடி அஞ்சல்,(தஞ்சைச் சாலை)செல்பேசி : 94431-93293புதுக்கோட்டை – 622 004 மின்னஞ்சல் : naamuthunilavan@ yahoo.co. .in
------- --------- --------- --------- --------- --------- --------- --------- -----
பெறுநர் : இணைய இதழ் நண்பர்கள் மற்றும் தமிழ் எழுத்தாளர்கள் அன்பிற்குரிய நண்பர்க்கு, வணக்கம். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் கடந்த ஆண்டு நடத்தியது போலவே இந்தஆண்டும் கந்தர்வன் நினைவுச் சிறுகதைப் போட்டியை நடத்திடத் திட்டமிட்டுள்ளது. 2007இல், தங்களைப்போன்ற நல்ல உள்ளங்கள் காட்டிய ஆர்வம் காரணமாக உலக அளவில் நல்ல ஆதரவு கிடைத்தது. வந்திருந்த 382 கதைகளில் 30க்கு மேற்பட்ட கதைகள் வெளிநாடுகளிலிருந்தே – மின்னஞ்சல் வழியாகவும், மண்ணஞ்சல் வழியாகவும் - வந்திருந்தன பரிசளிப்புவிழாவும் சிறப்பாக நடந்தது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்தத் தலைவர்களோடு, பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களும், திரைப்படப் பாடல் ஆசிரியர் நா.முத்துக்குமார் அவர்களும் கலந்து கொண்டு தேர்வுபெற்ற கதைகளை எழுதிய எழுத்தாளர்களுக்குப் பரிசுத்தொகையை வழங்கியது மேலும் சிறப்பாக அமைந்திருந்தது. அதில் முதல்பரிசு பெற்ற “எச்சங்கள்” சிறுகதை பிரபல முற்போக்கு இலக்கிய இதழ் “செம்மலர்” மாதஇதழில் வெளிவந்ததோடு, தமுஎச நண்பர்களால் குறும்படமாகவும் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.“கந்தர்வன் நினைவாக, த.மு.எ.ச.நடத்தும் சிறுகதைப்போட்டி-2007” அறிவிப்பை கடந்தஆண்டு வெளியிட்டுத் தந்தது போலவே இந்தஆண்டும் வெளியிட்டு, போட்டி விவரத்தினை உலகம் முழுவதும் உள்ள தமிழ் எழுத்தாளர்களுக்குக் கொண்டு சேர்க்கும் பணியில் தாங்கள் உதவவேண்டுமாய் உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன்.. எனது மின்னஞ்சல் முகவரியினையும் தவறாமல் குறிப்பிடவேண்டுகிறேன்.வணக்கம். தங்கள் தோழமையுள்ள நா.முத்து நிலவன் இணைப்பு: தங்கள் இதழில் வெளியிட்டு உதவ வேண்டிய போட்டி பற்றிய அறிவிப்புக் குறிப்பு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்தும் “கந்தர்வன் நினைவு சிறுகதைப் போட்டி--2008” தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம,; கடந்த ஆண்டு நடத்தியது போலவே இந்தஆண்டும் கந்தர்வன் நினைவுச் சிறுகதைப் போட்டியை நடத்திடத் திட்டமிட்டுள்ளது.முதல் பரிசு ரூ.5,000 இரண்டாம் பரிசு ரூ.3,000 மூன்றாம் பரிசு : ரூ.2,000 மற்றும் தேர்வுபெறும் சிறந்த சிறுகதை ஒவ்வொன்றிற்கும் ரூ.250 பரிசளிக்கப் படுவதோடு, கதைகள் சிறந்த இலக்கிய இதழ்களில் வெளியிடப்படும்.இந்த ஆண்டு பரிசுத்தொகையை,பிரபல திரைக்கவிஞர் நா.முத்துக்குமார் வழங்குகிறார். விதிமுறைகள்:ஒருவரே எத்தனை கதைகளை வேண்டுமானாலும் அனுப்பலாம்.பக்க அளவும், கதைக் கரு தேர்வும் எழுத்தாளரின் கருத்துக்கேற்ப இருக்கலாம். கதை, தனது சொந்தக் கற்பனையே என்றும் வெளிவராதது என்றும் உறுதிதந்து, பெயரைத் தனித்தாளில் முகவரி, தொலைபேசி எண்ணுடன் தரவேண்டும். (கதைப் பக்கங்களில் எழுதியவர் பெயர் முகவரி இருக்கக் கூடாது)வெளிநாடுகளில் இருப்போர் மின்னஞ்சலில் தொடர்பு கொண்டு, கதைகளை அனுப்பலாம்.

சிறுகதைகள் வந்துசேரவேண்டிய கடைசி நாள் : 11-09-2008 சிறுகதைகளை அனுப்ப வேண்டிய முகவரி:

--------- --------- ------------ --------- --------- --------- --------- --------- -
நா.முத்து நிலவன்,(துணைப் பொதுச்செயலர் -தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்)96, சீனிவாச நகர் 3ஆம் தெரு,புதுக்கோட்டை – 622 004 செல்பேசி : 94431-93293 மின்னஞ்சல் : naamuthunilavan@ yahoo.co. in

------------------------------------------------------------------------------------
Share/Save/Bookmark

No comments:

Post a Comment

வணக்கம்!

"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!


பதிவுக்கான மறுமொழிப் பெட்டி

நன்றி..!

♥ ஆதிசிவம்@சென்னை ♥

www.beyouths.blogspot.com

மின்னஞ்சல் வழியே உடனடியாகச் சூடாகப் புதியப் பதிவுகளைப் பெற...

Enter your email address:

Delivered by FeedBurner

Labels

Blog Archive

Search This Blog

Followers

About Me

My photo
e m@il: (loveable@poetic.com) (foryouths@beyouths.com) (mobile 9941463500)

உங்கள் கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்

Guestbook

என் வலைப் பூக்கள்...!

"நான் எப்போதும் மழையில் நடக்க விரும்புகிறேன். அப்போதுதான் நான் அழுவதை யாரும் பார்க்க முடியாது" -சார்லி சாப்ளின்


 என் வலைத்தளத்தில்
 www.nee-naan-nilaa.blogspot.com
  
நான் எழுதிய சார்லி சாப்ளின் கதையை
இந்த முகவரியில் இணைத்திருக்கிறது..!

கீற்று இணைய தளத்திற்கு...

நன்றி!
Clicky Web Analytics