

நீ இருந்த இடம்
மனசுக்கும்
அறிவுக்கும் போட்டி நடந்தது...!
தூரத்தில்
இருக்கும் காதலை
யார் போய்
முதலில் சேர்வதென்று...
அறிவு முதலாவதாக
வந்து காதலைக்
கூட்டிப் போய் விட்டது!
கடைசியாக இரத்த வியர்வையோடு
வந்த மனசு
காதல் இருந்த இடத்தில்
கண்களில்
இரத்தம் வர அழுது தீர்த்தது...!
"எப்படித்தான் மனசே
இல்லாதவனோடு
காலம் முழுவதும் வாழப் போகிறாளே? "
(அறிவு இல்லாமல் கூட வாழலாம்.அன்பு,நல்ல மனசு இல்லாமல் இருத்தலாகாது)
_ஆதிசிவம்,சென்னை.




No comments:
Post a Comment
வணக்கம்!
"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.beyouths.blogspot.com