"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!"

Monday, August 18, 2008

" தவத்திரு குன்றக்குடி அடிகளார்"-பாகம் 11






பாகம் 11
" தவத்திரு குன்றக்குடி அடிகளார் "-அவர்களின் கதை



கோவிலைத் தழுவிய குடிகளும்,குடிகளைத் தழுவிய கோவிலும் என்ற கொள்கையைத் தான் அடிகளார் நடைமுறைப் படுத்தினார்.

"கோவிலில் மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையில் தரகர்கள்(அர்ச்சகர்கள்,பூசாரிகள்) எதற்கு?பக்தர்கள் அனைவரும் கருவறைக்குள் சென்று,வழிபடும் உரிமையை வழங்கினால், இரட்டை வெற்றி கிடைக்கும் ", என்றார், அறிஞர் அண்ணா.

சிலர் கோவில் நகைகளுக்குப் பாதுகாவல் இல்லாமல் போய் விடும் என்று எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

"ஒரு தாய் தன் மகனிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முயல்வது வருந்தத்தக்கது, வேதனையானது.

எல்லோரும் கருவறைக்குள் சென்று வழிபடும் போது, தெய்வத்திற்கு நகைகள் அணிவதைத் தவிர்க்கலாம்.எனவே யார் வேண்டுமானாலும் அர்ச்சகராக நியமனம் பெறுமாறு அரசியல் சட்டத்தைத் திருத்துவதை,நான் வரவேற்கிறேன்", என்று அடிகளார் பேசினார்.

31.05.74 இல் குன்றக்குடி ஆதீனத்தின் அய்ந்து கோயில்கள் சார்பில் திருப்பத்தூரில் பட்டிமன்றம் நடை பெற்றது.மனிதன் கடவுளால் படைக்கப்பட்டவன். ஆம் ,இல்லை என்ற தலைப்புகளில் சொற்போர் நடந்தது.அடிகளார் அதன் நடுவராக இருந்தார்.

அடிகளாரின் அய்ம்பதாவது பிறந்த நாளின் போது, "பெரியார் இறந்த பிறகு வந்துள்ள எனது பிறந்த நாள் இது.சமயத்துறையில் நான் பெரியாரின் கொள்கையிலிருந்து மாறுபட்டாலும்,சாதி ஒழிப்பு,தீண்டாமை ஒழிப்பு ஆகிய கொள்கைகளில் எங்கள் இருவருக்கும் ஒற்றுமையுண்டு.

பெரியார் விட்டுச் சென்ற அந்தப் பணிகளை நான் தொடர்ந்து தீவிரமாகச் செயல்படுத்துவேன்", என்று அடிகளார் பேசினார்.

ஒரு சமயம் அடிகளார் பொட்டாசியம் குளோரைடு தொழிற்சாலையைப் பார்வையிடச் சென்றபோது,அங்கு பணியாற்றிய பெண்கள், அவருக்கு மரியாதை தரும் நோக்கத்தில் தங்கள் காலில் அணிந்திருந்த செருப்பை கழற்றினார்கள்.

உடனே அடிகளார் ,"செருப்பை அணிந்து கொள்ளுங்கள்.இல்லையேல் கால் புண்ணாகி விடும் என எச்சரித்தார்.தனக்கு மரியாதை தருவது பெரிதல்ல.கால்களை பாதுகாப்பது தான் முக்கியம்", என அவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.


சுமார் 3000 மக்கள் வாழும் குன்றக்குடி கிராமம் வானம் பார்த்த பூமியாக,வறண்டு கிடந்தது.அங்கிருத்த நிலங்களில் கால் பகுதி கூட சரி வர விவசாயம் செய்யப்பட்டவில்லை.முக்கால் பங்கு நிலம் வீணே கிடந்தது.

அவ்வூர் மக்களில் பெரும் பான்மையோர் விவசாயக் கூலிகள்,வறுமைக் கோட்டின் கீழே மூச்சுத் திணறிக் கொண்டிருந்த அவர்களை முன்னேறச் செய்வது எப்படி? என அடிகளார் சிந்தித்தார்.

அவர் 1976 அக்டோபர் 2 ஆம் தேதி(காந்தி ஜெயந்தி அன்று) அவ்வூர்ப் பெரியவர்களை அழைத்துப் பேசினார்.நாம் எல்லோரும் சேர்ந்து, நம் கிராம முன்னேற்றத்திற்கு முயற்சி செய்யலாம்.இந்த மண்ணில் கிடைக்கும் மூலப்பொருட்களையும்,விளைபொருட்களையும் பயன்படுத்தி,கூட்டுறவு முறையில் தொழில்கள் தொடங்கலாம் என அடிகளார் தெரிவித்தார்.

முதலில் குன்றக்குடி கிராம மக்களைப் பற்றிய தகவல்கள் புள்ளி விவரக் கணக்குகள் தயாரிக்கப் பட்டன.ஒவ்வொரு குடும்பத்தினரின் எண்ணிக்கை,வயது வந்த ஆண்கள்,பெண்கள்,சிறுவர்கள்,அவர்களின் கல்வித் தகுதி, தொழில்,தகுதி, ஆர்வம்,வீடு,ஆடுமாடுகள்,நிலம் போன்ற சொத்து வசதி,இதர வசதிகள்,கடன்நிலை போன்ற விவரங்கள் தொகுக்கப் பட்டன.

1977 காந்தி ஜெயந்தியன்று அதற்கான குன்றக்குடி திட்டக் குழு உருவானது.

பாலிதீன் பைகள் தயாரிக்கும் தொழிற்சாலை, பனை ஓலை மற்றும் நார்களால் முறம், கூடை, விசிறி,பெட்டி,துடைப்பம் போன்ற வீட்டு உபயோகப் பொருட்களை செய்யும் குடிசைத் தொழில்,முந்திரிக் கொட்டையிலிருந்து பருப்பைப் பிரித்து எடுக்கும் தொழிற்சாலை,அந்த பருப்பு நீக்கப் பட்ட தோட்டிலிருந்து பெயிண்ட் தயாரிக்கும் தொழிற்சாலை,பட்டுப் பூச்சி வளர்த்து,பட்டு நூல் எடுக்கும் திட்டம்
என பல திட்டங்களாக விரிவடைந்தது.

1980 ஆம் வருடத்தில் குன்றக்குடியில் இருந்த ஒரே ஒரு கந்து வட்டிக்கடைக்காரரையும் அங்கிருந்து வெளியேற்ற தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன.வட்டிக் கடைக்காரர் வெளியேற மறுத்தார்.எனவே அவரிடம் இனிமேல் யாரும் கடன் வாங்கக் கூடாது என்ற திட்டம் இயற்றப் பட்டது.

எனவே கந்து வட்டிக்கடைக்காரர் தானாகவே அங்கிருந்து வெளியேறினார்.

1989 இல் தமிழக முதலைச்சராக கலைஞர் கருணாநிதி மீண்டும் பதவியேற்ற, பிறகு குன்றக்குடியிலும் மதுபானக்கடை திறக்கப் பட்டது.

அடிகளார் அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, அந்த ஒற்றை மதுக் கடையையும் ஒழித்தார்.


1984 செப்டம்பர் 9 ஆம் தேதியிட்ட இந்து பத்திரிக்கையில் சமூக அடித்தள நிலையில் சில சாதனைகள் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டு இருந்தது.குன்றக்குடி கிராமத் திட்டக் குழுவின் சாதனைகள் அதில் விவரிக்கப் பட்டிருந்தன.

அப்போதைய இந்திய பிரதமர் இந்திரகாந்தி அதைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தார்.அனைத்துக் கிராமங்களுக்கும் நான் விரும்பும் திட்டம் இதுவே என அடிகளாருக்குப் பாராட்டுக் கடிதம் எழுதினார்.

டெல்லியில் உள்ள திட்டக் கமிஷன் அலுவலகத்திற்கும் பிரதமர் கடிதம் எழுதினார்.இந்து பத்திரிக்கையில் வெளியான கட்டுரையை அத்துடன் இணைக்கப் பட்டிருந்தது.குன்றக்குடியை முன் மாதிரியாக எடுத்துக் கொண்டு மற்ற கிராமங்களிலும் இது போன்ற திட்டங்களைச் செயல் படுத்துமாறு பிரதமர் அதில் கேட்டுக் கொண்டார்.

அதைத் தொடர்ந்து 1985 பிப்ரவரியில் திட்ட ஆலோசகர் கே.வி.சுந்தரம், ஒரு குழுவினருடன் குன்றக்குடிக்கு வருகை தந்தார். அந்த குழு அங்கு 4 நாட்கள் தங்கியிருந்து,குன்றக்குடி திட்டக் குழுவின் செயல்பாடுகளை நேரில் பார்வையிட்ட, பிறகு சென்றது.

06-08-1982 இல் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தமிழ் அர்ச்சனை மாநாடு காரைக்குடி பழ. கருப்பையா அவர்களின் முயற்சியால் நடை பெற்றது. அந்த மாநாட்டிற்கு நம் தவத்திரு. குன்றக்குடி அடிகளார் அவர்கள் தலைமை தாங்கினார்.

அந்த மாநாட்டில் தான் மீனாட்சியம்மன் கோவிலில் வடமொழியில் அர்ச்சனை நடத்தப் படும்.தமிழ் அர்ச்சனை வேண்டுமென விரும்புவோர் கோரிப் பெறலாம் என்ற விதி இருந்து வந்தது.

அந்த விதி மாற்றி அமைக்கப்பட்து.

இனி தமிழ் மொழியில் அர்ச்சனை நடை பெறும்.வட மொழி அர்ச்சனை வேண்டுமென விரும்புவோர் கோரிப் பெறலாம் என்ற புதிய விதி உருவானது.

1991 மே மாதத்தில் அடிகளார் அமெரிக்கா,இங்கிலாந்து,ஜப்பான் முதலிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்து, அங்குள்ள மனிதர்களின் வாழ்க்கை முறைகளை கண்டு வந்தார்.

1982 பிப்ரவரி,மார்ச் மாதங்களில் கன்னியாகுமரி மாவட்டம், மண்டைக்காடு பகுதியில் இந்து கிறிஸ்தவ மதக் கலவரம் தீயாய் எரிந்தது.

போலீஸ்,அரசாங்கம்,அரசியல் கட்சிகளாலும் கூட கலவரத்தை அடக்க முடியவில்லை.குன்றக் குடி அடிகளார் அமைதிப் பணிக்கு அங்கு விரைந்தார்.

கலவரப் பூமியில் ஒர் அமைதிப் புறாவாக, ஒர் அமைதிப் புயலாக!...


_ஆதிசிவம்,சென்னை.






Share/Save/Bookmark

No comments:

Post a Comment

வணக்கம்!

"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!


பதிவுக்கான மறுமொழிப் பெட்டி

நன்றி..!

♥ ஆதிசிவம்@சென்னை ♥

www.beyouths.blogspot.com

மின்னஞ்சல் வழியே உடனடியாகச் சூடாகப் புதியப் பதிவுகளைப் பெற...

Enter your email address:

Delivered by FeedBurner

Labels

Blog Archive

Search This Blog

Followers

About Me

My photo
e m@il: (loveable@poetic.com) (foryouths@beyouths.com) (mobile 9941463500)

உங்கள் கருத்துக்களை இங்கே தெரிவிக்கவும்

Guestbook

என் வலைப் பூக்கள்...!

"நான் எப்போதும் மழையில் நடக்க விரும்புகிறேன். அப்போதுதான் நான் அழுவதை யாரும் பார்க்க முடியாது" -சார்லி சாப்ளின்


 என் வலைத்தளத்தில்
 www.nee-naan-nilaa.blogspot.com
  
நான் எழுதிய சார்லி சாப்ளின் கதையை
இந்த முகவரியில் இணைத்திருக்கிறது..!

கீற்று இணைய தளத்திற்கு...

நன்றி!
Clicky Web Analytics