

ஹைக்கூ
பொய்ப் பேசி...!
தட்டச்சு இயந்திரங்கள் தயாரிக்கும்
தொழிற்சாலை இருந்த இடம் தோண்டப் பட்டது
கணினிக் கட்டிடம் எழுப்ப..
அரசியல் வாதிக்கு
மேடையில் தந்த வீரவாள் உண்மை பேசியது
ஊழல் மன்னன் நீ...!
மொபைல் பேசிக்கு
கவிதைத் தமிழ் பெயர் வைத்தது.
பொய்ப் பேசி...!
வீட்டுக்காரரிடம்
விலைவாசி உயர்வு பற்றி பேசுவதைத் தவிர்த்தேன்
வீட்டு வாடகையை உயர்த்திவிடுவார் என்று
_ஆதிசிவம்,சென்னை.




No comments:
Post a Comment
வணக்கம்!
"நகர்ந்து கொண்டிருப்பதே நதி!-இயங்கிக் கொண்டிருப்பவனே இளைஞன்!
பதிவுக்கான மறுமொழிப் பெட்டி
நன்றி..!
♥ ஆதிசிவம்@சென்னை ♥
www.beyouths.blogspot.com